தாராபுரத்தில் பட்டதரசி கோவிலில் கும்பாபிஷேகம் - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

தாராபுரம் அருகே குப்பிச்சிபாளையத்தில் உள்ள ஸ்ரீ பட்டதரசி திருக்கோயில் நடைபெற்ற மகா கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.



திருப்பூர்: கும்பாபிஷேக விழாவில் ஆத்துக்கால்புதூர் , வரப்பாளையம், நஞ்சியம்பாளையம், எம்ஜிஆர் நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே‌ குப்பிச்சிபாளையம் ஸ்ரீ மஹா கணபதி, அருள்மிகு ஸ்ரீ பட்டதரசி அம்மன். ஸ்ரீ கருப்பண்ணசுவாமி, ஸ்ரீ கன்னியாத்தாள் ஆகிய திருக்கோவில்கள் உள்ளன.

100 ஆண்டுகள் பழமையான புகழ் பெற்ற இந்த கோவிலில் மகா கும்பாபிஷேக விழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.



விழாவையொட்டி கணபதி ஹோமம், ஸ்ரீ லட்சுமி பூஜை ஹோமம், நவக்கிரக ஹோமம் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கால யாக பூஜைகள் நடத்தப்பட்டு நாடி சந்தனம், தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

தொடர்ந்து யாக சாலையில் இருந்து கடம் புறப்பாடு நடத்தப்பட்டு யாகசாலையில் இருந்து புனித நீர் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு முதலில் ஸ்ரீ பட்டத்தரசிக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.



அதனைத் தொடர்ந்து அருள்மிகு ஸ்ரீ பட்டத்தரசி விமானம் உள்ளிட்ட மற்றும் அனைத்து தெய்வங்களில் மகா கும்பாபிஷேகம் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டது. கோயில் கோபுர கலசத்தில் ஊற்றப்பட்ட மகா கும்பாபிஷேக தீர்த்தம் பொதுமக்கள் மேல் தெளிக்கப்பட்டது.



இதில் தாராபுரம், ஆத்துக்கால்புதூர் , வரப்பாளையம், நஞ்சியம்பாளையம், எம்ஜிஆர் நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் மற்றும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய தலைவர் சாந்தி முருகேஷ், கந்தசாமி வி. முருகன், கே.பி. மனோகரன், தனபால், சரவணன், ஆர். முருகேஷ் ஆகியோர் செய்தனர்.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...