கேரளாவில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவல் - கோவை எல்லைப்பகுதியில் சோதனை தீவிரம்

கேரளாவில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவி வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவையில் கேரள எல்லைப்பகுதியான வாளையாறு சோதனை சாவடியில் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.



கோவை: கேரளாவில் இருந்து வரும் மக்களுக்கு உடல் வெப்பநிலை சோதனை செய்யப்படுகிறது. பேருந்துகளில் வரும் மக்களும் சோதனை மேற்கொள்ளப்பட்டு, அவர்கள் எங்கிருந்து வருகிறார்கள் கோவையில் எங்கு செல்கின்றார்கள் என்ற விவரங்களை அதிகாரிகள் சேகரித்தனர்.

கேரளாவில் கோழிக்கோடு பகுதியில் நிபா வைரஸ் காய்ச்சலுக்கு தாய் மற்றும் குழந்தைகள் உயிரிழந்திருப்பது சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பும் கேரளாவில் நிபா வைரஸ் தாக்கப்பட்டு பலர் உயிரிழந்த நிலையில் தற்போது மீண்டும் அங்கு நிபா வைரஸ் காய்ச்சல் பரவி வருவது அனைத்து மக்களிடையேயும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.



இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாடு-கேரளா எல்லைப்பகுதிகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.



அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் கேரள எல்லை பகுதியான வாளையாறு சோதனை சாவடியில், கேரளாவில் இருந்து வரும் மக்களுக்கு உடல் வெப்பநிலை சோதனை செய்யப்படுகிறது. மேலும் பேருந்துகளில் வரும் மக்களும் சோதனை மேற்கொள்ளப்படுகிறது.



அவர்கள் எங்கிருந்து வருகிறார்கள் கோவையில் எங்கு செல்கின்றார்கள் எனவும் அதிகாரிகள் கேட்டறிந்து கொள்கின்றனர்.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...