இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்யக்கூடாது - கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ராஷ்ட்ரிய இந்து மகாசபா மனு

செப்டம்பர் 15ஆம் தேதி அண்ணா பிறந்த நாளையொட்டி, இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்யக்கூடாது என கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ராஷ்ட்ரிய இந்து மகாசபா சார்பில் மனு அளிக்கப்பட்டது.


கோவை: இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை செய்வதை தமிழக அரசு பரிசீலனை செய்ய மாவட்ட ஆட்சியர் ஆவணம் செய்ய வேண்டும் என ராஷ்ட்ரிய இந்து மகாசபா சார்பில் கேட்டுகொள்ளப்பட்டுள்ளது.

செப்டம்பர் 15ஆம் தேதி அண்ணா பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில் நன்னடத்தை அடிப்படையில் சிறைவாசிகள் விடுதலை செய்யப்படுவர்கள்.

இந்நிலையில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்யக்கூடாது என வலியுறுத்தி ராஷ்ட்ரிய இந்து மகாசபா சார்பில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

அதன் மாநில தலைவர் வேலுசாமி தலைமையில் அளிக்கப்பட்ட மனுவில், அமைதி பூங்காவாக திகழும் தமிழகத்தை திட்டமிட்டே சில இஸ்லாமிய அமைப்புகள் குண்டு வெடிப்பு குற்றவாளிகளை அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு விடுதலை செய்ய கோரி வருவதாகவும், இதனை தமிழக அரசு பரிசீலனை செய்ய மாவட்ட ஆட்சியர் ஆவணம் செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...