கோவையில் மது போதையில் கணவனை கட்டையால் அடித்துக் கொன்ற மூதாட்டி கைது..!!

கோவையில் மது குடிக்கும் போது கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட தகராறில் கணவனை கட்டையால் அடித்தே கொன்ற மூதாட்டியை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


கோவை: கணவன் மனைவி இருவரும் அமர்ந்து மது குடிக்கும்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமனைந்த மூதாட்டி கணவனை கட்டையால் அடித்து கொன்றார்.

கோவை ராமநாதபுரம் சுங்கம் பைபாஸ் ரோடு, தியாகி சிவராம் நகரை சேர்ந்தவர் லோகநாதன், 75. இவர் நேற்று முன்தினம் இரவு, வீட்டில் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். தகவல் அறிந்து வந்த ராமநாதபுரம் போலீசார் விசாரனை நடத்தினர். இதில்லோகநாதனை, அவரது மனைவி தெய்வானை மரக்கட்டையால் அடித்து, கொலை செய்தது தெரிந்தது.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட தெய்வானை, போலீசாரிடம் கூறியதாவது: எனது கணவர் லோகநாதனுக்கு வேலை இல்லை. நான் வீட்டு வேலைகளுக்கு சென்று வந்தேன். மகன் மணிகண்டன் செல்வபுரத்தில் குடியிருந்து வருகிறார். எங்களுக்கு மதுப்பழக்கம் உள்ளது.

நேற்று முன்தினம் இருவரும், வீட்டில் மது குடித்தோம். போதையில் தகராறு ஏற்பட்டது. அப்போது எனது கணவர், என்னை கைகளால் தாக்கினார். பதிலுக்கு, நான் வீட்டில் இருந்த மரக்கட்டையை எடுத்து தாக்கினேன். அவர் பலத்த காயம் அடைந்து, உடனே இறந்து விட்டார் என போலீசாரிடம் தெய்வானை கூறினார். இதனையடுத்து தெய்வானையை நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...