சனாதனம் விவக்காரத்தில் உதயநிதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்..!! கோவை மாநகர காவல் ஆணையரிடம் இந்து அன்னையர் முன்னணி அமைப்பு புகார்.!

சனாதனம் விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலின் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்க கோரி இந்து அன்னையர் முன்னணி அமைப்பினர் கோவை மாநகர காவல் ஆணையாளரிடம் புகார் மனு அளித்தனர்.



கோவை: தமிழக விளையாட்டுத்துறை அமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து அன்னையர் முன்னணி அமைப்பினர் கேட்டுகொண்டனர்.

சென்னையில் கடந்த இரண்டாம் தேதி சனாதனம் ஒழிப்பு மாநாட்டை தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கம் அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. அந்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசியிருந்தார். சிலவற்றை நாம் ஒழிக்க தான் ஆக வேண்டும். எதிர்க்க முடியாது கொசு டெங்கு மலேரியா கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்க கூடாது ஒழித்து கட்ட வேண்டும் அப்படித்தான் இந்த சனாதனத்தை எதிர்ப்பதை விட ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் பணி என்று பேசியிருந்தார்.



இதற்கு பல்வேறு அமைப்புகள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்து அன்னையர் முன்னணி அமைப்பினர் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் உதயநிதி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புகார் மனு அளித்தனர்.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...