கோவை வந்த தமிழக முதலமைச்சரிடம் அவினாசி - அத்திக்கடவு திட்டத்தை நிரைவேற்ற வேலுநாச்சியார் இயக்கத்தினர் மனு

கோவை வந்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் அவினாசி- அத்திக்கடவு திட்டத்தை உடனடியாக நிரைவேற்ற வேண்டி அவினாசி அத்திக்கடவு நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டத்தின் வேலுநாச்சியார் இயக்கத்தினர் மனு அளித்தனர்.

சேலம் மற்றும் எடப்பாடியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று விமானம் மூலம் கோவை வந்தார். அவரை மாவட்ட, மாநகராட்சி, காவல்துறை உள்ளிட்ட துறைகளின் அதிகாரிகள் வரவேற்றனர்.

தொடர்ந்து அவரை நேரில் சந்தித்த அவினாசி அத்திக்கடவு நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டத்தின் அத்திக்கடவு வேலுநாச்சியார் இயக்கத்தினர் மனு ஒன்றை அளித்தனர்.

அம்மனுவில், அவினாசி அத்திக்கடவு திட்டத்தை தேசிய பேரிடராக கருதி உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை விடப்பட்டிருந்தது. மனுவை பெற்றுக்கொண்ட முதலமைச்சர், அவினாசி அத்திக்கடவு திட்டத்தை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நிறைவேற்ற உறுதிபூண்டிருந்ததாகவும், இது தொடர்பாக கோவை வந்த பிரதமர் மோடியிடமும் தாம் வலியுறுத்தியிருந்ததாகவும் தெரிவித்தார். விரைவில் இத்திட்டத்தை செயல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் அப்போது உறுதியளித்தார்.

இதைத் தொடர்ந்து சேலத்திற்கு கார் மூலம் முதலமைச்சர் புறப்பட்டு சென்றார். முன்னதாக, முதலமைச்சர் வருகையை ஒட்டி கோவை விமான நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Newsletter

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...

காதல் விவகாரத்தில் தற்கொலை குறுஞ்செய்தி அனுப்பிய கோவை கல்லூரி மாணவி மாயம்

கோவையில் தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்த கேரளாவைச் சேர்ந்த 23 வயதான கல்லூரி மாணவி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற...

கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,...

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...