ஒரு வார காலத்திற்குள் ரேசன் பொருட்கள் கிடைக்காவிட்டால் மாநிலம் தழுவிய போராட்டம் நடைபெறும்- தமிழிசை சவுந்தரராஜன்

ஒரு வார காலத்திற்குள் முறையாக ரேசன் பொருட்கள் கிடைக்கவில்லை எனில் பாஜக சார்பில் மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடைபெறும் என பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.



கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பா ஜ க மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராசன் கூறுகையில், தமிழகத்தில் பிரதான பிரச்சனையான குடிநீர் பிரச்சனையை தீர்க்க தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக அரசு பெட்ரோல், டீசல் மீதான வாட்வரியை உயர்த்தி இருப்பதால், பேருந்து கட்டணம், அத்தியாவசிய பொருட்கள் மற்றும் கட்டுமான பொருட்களின் விலை உயர்ந்து உள்ளது. தமிழகத்தில் உள்ள பிரச்சனைகளைத் தீர்க்க தமிழக அரசிடம் நிர்வாக திறமை இல்லை.

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுதல் மற்றும் வேட்பாளர் தேர்வு குறித்து சென்னையில் வருகின்ற 16-ம் தேதி நடைபெறும் ஆட்சி மன்றக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.

ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் வேலைகள் ஆரம்பிக்கும் முன்னரே வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டு வருகிறது. தேர்தல் ஆணையம் ஆரம்ப நிலையில் இருந்து கண்காணித்து தேர்தல் நேர்மையாக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்றார்.

மேலும், ஒரு பலமும் இல்லாத மக்கள் நலக்கூட்டணிக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் எதற்காக அழைப்பு விடுத்தார் ?. என கேள்வி எழுப்பிய அவர், அ தி மு க விற்கு மாற்று தி மு க கிடையாது என தெரிவித்தார்.

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர் முத்து கிருஷ்ணன் தற்கொலை தொடர்பாக தீவிரமாக விசாரிக்க வேண்டுமெனவும், வட மாநிலங்களுக்கு கல்வி பயில செல்லும் தமிழக மாணவர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். 

மேலும், ஒரு வார காலத்திற்குள் முறையாக ரேசன் பொருட்கள் கிடைக்கவில்லை எனில் பா ஜ க மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தும் என தமிழிசை சவுந்திரராசன் தெரிவித்தார்.

Newsletter

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...

கோவையில் இரவு பெய்த கனமழை; மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதி

வானிலை ஆய்வு மையம் எச்சரித்தபடி கோவையில் நேற்று மாலை கனமழை பெய்தது. உக்கடம், ரயில் நிலையம், காந்தி பார்க் உள்ளிட்ட பகுதி...

வெள்ளியங்கிரியில் யானை துரத்தியதில் இருசக்கர வாகன ஓட்டுநர் படுகாயம்

வெள்ளியங்கிரி அடிவாரத்தில் முள்ளங்காடு செக் போஸ்ட் அருகே இன்று அதிகாலை யானை துரத்தியதில் டீ வியாபாரி ஆறுச்சாமி இருசக்கர...

12,522 மெட்ரிக் டன் உர இருப்பு கோவையில்; முறைகேடு செய்தால் உரிமம் ரத்து

கோவை மாவட்டத்தில் வரவிருக்கும் கோடைப்பயிர் சாகுபடிக்காக 12,522 மெட்ரிக் டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக வேளாண்மை...

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...