ஒரு வார காலத்திற்குள் ரேசன் பொருட்கள் கிடைக்காவிட்டால் மாநிலம் தழுவிய போராட்டம் நடைபெறும்- தமிழிசை சவுந்தரராஜன்

ஒரு வார காலத்திற்குள் முறையாக ரேசன் பொருட்கள் கிடைக்கவில்லை எனில் பாஜக சார்பில் மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடைபெறும் என பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.



கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பா ஜ க மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராசன் கூறுகையில், தமிழகத்தில் பிரதான பிரச்சனையான குடிநீர் பிரச்சனையை தீர்க்க தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக அரசு பெட்ரோல், டீசல் மீதான வாட்வரியை உயர்த்தி இருப்பதால், பேருந்து கட்டணம், அத்தியாவசிய பொருட்கள் மற்றும் கட்டுமான பொருட்களின் விலை உயர்ந்து உள்ளது. தமிழகத்தில் உள்ள பிரச்சனைகளைத் தீர்க்க தமிழக அரசிடம் நிர்வாக திறமை இல்லை.

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுதல் மற்றும் வேட்பாளர் தேர்வு குறித்து சென்னையில் வருகின்ற 16-ம் தேதி நடைபெறும் ஆட்சி மன்றக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.

ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் வேலைகள் ஆரம்பிக்கும் முன்னரே வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டு வருகிறது. தேர்தல் ஆணையம் ஆரம்ப நிலையில் இருந்து கண்காணித்து தேர்தல் நேர்மையாக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்றார்.

மேலும், ஒரு பலமும் இல்லாத மக்கள் நலக்கூட்டணிக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் எதற்காக அழைப்பு விடுத்தார் ?. என கேள்வி எழுப்பிய அவர், அ தி மு க விற்கு மாற்று தி மு க கிடையாது என தெரிவித்தார்.

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர் முத்து கிருஷ்ணன் தற்கொலை தொடர்பாக தீவிரமாக விசாரிக்க வேண்டுமெனவும், வட மாநிலங்களுக்கு கல்வி பயில செல்லும் தமிழக மாணவர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். 

மேலும், ஒரு வார காலத்திற்குள் முறையாக ரேசன் பொருட்கள் கிடைக்கவில்லை எனில் பா ஜ க மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தும் என தமிழிசை சவுந்திரராசன் தெரிவித்தார்.

Newsletter

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...

நாளை பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு!

தமிழ்நாட்டில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (மே 8) காலை 9.30 மணிக்கு வெளியாகும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்...

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...