தாராபுரத்தில் மக்கள் நீதிமன்றம் - 5 கோடி மதிப்பில் 167 வழக்குகளுக்கு தீர்வு!

தாராபுரம் வட்ட சட்டப் பணிகள் குழுவின் சார்பில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கூடுதல் மாவட்ட நீதிபதி ஜான் மீனோ தலைமையில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றம் நிகழ்வில், 167 வழக்குகளுக்கு ரூ.5.64 கோடி மதிப்பீட்டில் தீர்வு காணப்பட்டது.


திருப்பூர்: தாராபுரம் வட்ட சட்டப் பணிகள் குழுவின் சார்பில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றம் நிகழ்வில், 167 வழக்குகளுக்கு ரூபாய் 5 கோடியே 64 லட்சம் மதிப்பீட்டில் தீர்வு காணப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்ட சட்டப் பணிகள் குழுவின் சார்பில் தாராபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், தேசிய மக்கள் நீதிமன்றம் தாராபுரம் கூடுதல் மாவட்ட நீதிபதி ஜான் மீனோ தலைமையில் நடைபெற்றது.



இதில் வட்ட சட்டப் பணிகள் குழுத் தலைவரும், சார்பு நீதிபதியுமான தருமபிரபு, ஓய்வு நீதிபதி நாகராஜன், உரிமையியல் நீதிபதி மதிவதனி வணங்காமுடி மற்றும் வழக்கறிஞர்கள் முன்னிலையில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

இதில் 31 மோட்டார் வாகன விபத்து வழக்குகள், 18 உரிமையியல் வழக்குகள், 96 குற்றவியல் சிறு வழக்குகள், மூன்று ஜீவனாம்ச வழக்கு, ஒரு குடும்ப வன்முறை வழக்கு, ஒரு காசோலை வழக்கு ஐந்து வங்கி வார கடன் வழக்கு 12 என மொத்தம் 167 வழக்குகளுக்கு ரூபாய் 5 கோடி 64 லட்சம் மதிப்பீட்டில் தீர்வு காணப்பட்டது.

இதில் 38,714 மக்கள் நீதிமன்றத்தின் மூலம் பயன்பெற்றனர். இதில் அரசு வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...