மனக்கடவு சாலை விபத்தில் மேலும் ஒருவர் பலி!

தாராபுரம் - பழனி சாலை மனக்கடவு பகுதியில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு இரண்டு கார் ஒரு வேன் மோதிக்கொண்ட விபத்தில் ஏற்கனவே இருவர் பலியான நிலையில், படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த லலிதா என்ற பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


திருப்பூர்: தாராபுரம் அடுத்த மனக்கடவு பகுதியில் கடந்த வாரம் நிகழ்ந்த விபத்தில் படுகாயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.



திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த மனக்கடவு பகுதியில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு தாராபுரம் பழனி சாலையில் இரண்டு கார் ஒரு வேன் மோதிக்கொண்ட விபத்தில் ஏற்கனவே இரண்டு பேர் விபத்தில் மரணம் அடைந்தனர்.

இந்நிலையில் காங்கேயத்தைச் சேர்ந்த லலிதா என்ற பெண்மணி கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பிறகு பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை எடுத்து வந்தார்.



இந்நிலையில் உடல்நலம் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார். ஒரே விபத்தில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் தாராபுரம் காங்கேயம் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...