சுங்கச்சாவடி கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு: கோவையில் தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டம்

உயர்த்தப்பட்ட சுங்கச்சாவடி கட்டணத்தை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தி கோவையில் தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை: "ரோடு போட மக்கள் வரி ... எதுக்கையா சுங்கவரி", "வஞ்சிக்காதே வஞ்சிக்காதே வாகன ஓட்டிகளை வஞ்சிக்காதே", "திரும்ப பெறு திரும்ப பெறு உயர்த்திய கட்டணத்தை திரும்ப பெறு" என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழக்கமிட்டனர்.

பொதுமக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய பயன்பாடுகளில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளை உள்ளிட்டவற்றின் விலை விண்ணைத் தொட்டிருக்கும் நிலையில், சுங்கச்சாவடி கட்டணமும் ஒன்றிய அரசாங்கத்தால் உயர்த்தப்பட்டு இருக்கிறது.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளை ஆகியவற்றின் விலை ஒரு பக்கம் பொது மக்களின் பொருளாதாரத்தை பதம் பார்க்கும் நிலையில், சுங்க சாவடி கட்டண உயர்வும் இத்துடன் கைகோர்த்து இருக்கின்றது.

இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை அவரிவிதமாக உயரும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. இதனை கண்டித்து தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் விஜயகாந்த் சுங்கச்சாவடி முன் ஒன்றிய அரசாங்கத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தப் போவதாக அறிவித்திருந்தார்.



இந்த நிலையிலே தேமுதிக கோவை மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொச்சின் சாலையில் உள்ள சுங்கச்சாவடி முன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். "ரோடு போட மக்கள் வரி ... எதுக்கையா சுங்கவரி", "வஞ்சிக்காதே வஞ்சிக்காதே வாகன ஓட்டிகளை வஞ்சிக்காதே", "திரும்ப பெறு திரும்ப பெறு உயர்த்திய கட்டணத்தை திரும்ப பெறு" என ஆர்ப்பாட்டக்காரர்கள் முழங்கினர்.

சுங்கச்சாவடி கட்டண உயர்வால் தரைவழி வர்த்தகத்தை மையப்படுத்திய அனைத்து பொருட்களின் விலையும் அபரிவிதமாக உயரும் என குற்றம் சாட்டினர். அதே சமயம் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளை உள்ளிட்டவற்றின் விலை நடுத்தர ஏழை மக்களை கடுமையாக பாதித்து இருக்கின்ற நிலையில், சுங்கச்சாவடி கட்டண உயர்வும் அத்தியாவசிய பொருட்களின் விலையை அதிகரிக்க செய்து ஏழை எளிய மக்களை வாட்டி வதைக்கும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் காட்டமாக தெரிவித்தனர். எனவே சுங்கச்சாவடி கட்டணத்தை திரும்ப பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், ஏழை எளிய நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க முறையான பொருளாதார நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.



இந்த ஆர்பாட்டத்தில் கோவை தெற்கு மாவட்ட செயலாளர் Ljj ஜெகன் தலைமையில் கோவை மாநகர் மாவட்ட செயலாளர் சிங்கை k சந்துரு, கோவை வடக்கு மாவட்ட செயலாளர் சண்முகவடிவேலு,மாநில மகளிர் அணி துணை செயலாளர் வனிதாதுரை, மாநில தொழிற்சங்க துணை சட்ட ஆலோசகர் முருகராஜ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. கோவை ஒருகிணைந்த மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, ஊராட்சி, தொழிற்சங்கம் உளளிட்ட அணைத்து நிர்வாகிகள் வார்டு கிளை கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...