பணிநீக்க காலத்தை பணி காலமாக அறிவிக்க வேண்டும்..!! தாராபுரத்தில் நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்.!

தாராபுரத்தில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை, சாலை பராமரிப்பு ஊழியர் சங்கம் சார்பில் சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணி காலமாக அறிவிக்க கோரி முரசு கொட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர்: 41 மாத பணிநீக்க காலத்தை பணி காலமாக அறிவிக்க வேண்டும். கூடுதலாக 10% ஆபத்துபடி உயர்வு வழங்க வேண்டும். காலியாக உள்ள 8000 சாலை பணியாளர்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் கேட்டுகொண்டனர்.



திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



அப்போது கடந்து 2002-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் பத்தாயிரம் பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு, மீண்டும் 2006 ஆம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் அவர்களை பணி நியமனம் செய்யப்பட்டது.



இதில் 41 மாத பணிநீக்க காலத்தை பணி காலமாக அறிவிக்க வேண்டும். நெடுஞ்சாலை துறை பணியாளர்கள் பணி ஆபத்து பணி என்பதால் அவர்களுக்கு கூடுதலாக 10% ஆபத்துபடி உயர்வு வழங்க வேண்டும். தமிழகம் முழுவதும் நெடுஞ்சாலை கட்டுப்பாடு மற்றும் பராமரிப்பு கோட்டங்களில் காலியாக உள்ள 8000 சாலை பணியாளர்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி முரசு கொட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...