அமைச்சர் உதயநிதிக்கு கொலை மிரட்டல் விடுத்த சாமியார் உருவபொம்மை எரிப்பு!

சனாதன சர்ச்சை தொடர்பாக அமைச்சர் உதயநிதிக்கு கொலை மிரட்டல் விடுத்த உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பரமஹம்ச ஆச்சார்ய சாமியாரை கண்டித்து வால்பாறையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர், அவரது உருவபொம்மையை எரித்து தங்கள் எதிர்ப்பினை பதிவு செய்தனர்.



கோவை: அமைச்சர் உதயநிதிக்கு கொலை மிரட்டல் விடுத்த உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சாமியாரின் உருவ பொம்மை எரித்து வால்பாறையில் திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை மாவட்டம் வால்பாறையில் திமுக நகரச் செயலாளர் சுதாகர் தலைமையில், நகராட்சி அலுவலகத்திற்கு முன்பு அமைச்சர் உதயநிதிக்கு கொலை மிரட்டல் விடுத்த உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சாமியாரை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பரமஹம்ச ஆச்சார்ய சாமியாரின் உருவ பொம்மை எரித்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.



வால்பாறை நகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற திமுகவினரின் ஆர்ப்பாட்டத்தின் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...