கிருஷ்ணரை வரவேற்க கண்ணன், ராதை வேடமிட்டு உற்சாக நடனமாடிய மூத்த குடிமக்கள்!

தாளியூரில் உள்ள மூத்த குடிமக்களின் குடியிருப்பான அனன்யா'ஸ் நானாநானி ஹோம்ஸில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற கோகுலாஷ்டமி விழாவில், மூத்த குடிமக்கள், கண்ணன் மற்றும் ராதை வேடமிட்டு ஆடி பாடி கிருஷ்ணரை வரவேற்றனர்.



கோவை: தாளியூரில் உள்ள மூத்த குடிமக்கள் குடியிருப்பில் கோகுலாஷ்டமி விழாவில் மூத்த குடிமக்கள், கண்ணன் மற்றும் ராதை வேடமிட்டு ஆடி பாடி கிருஷ்ணரை வரவேற்றனர்.



கோவை மாவட்டம் தாளியூரில் உள்ள மூத்த குடிமக்களின் குடியிருப்பான அனன்யா'ஸ் நானாநானி ஹோம்ஸில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கோகுலாஷ்டமி விழாவானது வெகு விமரிசையாக நடைபெற்றது.



இதை முன்னிட்டு காலை கோ பூஜை, நவகலச திருமஞ்சனம், விஸ்வரூப தரிசனமும் நடைபெற்றது. தொடர்ந்து, மாலை தங்கத்தேர் திருவீதி உலா புறப்பாடு நடைபெற்றது.



இதில், மூத்த குடிமக்கள் ராதா கிருஷ்ணர் வேடமிட்டு ஆடியும் பாடியும் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை வரவேற்றனர்.



இங்குள்ள மூத்த குடிமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து இவ்விழாவினை வெகு விமர்சையாக கொண்டாடினர். இந்நிர்வாகத்தின் இயக்குநர் Dr.உமா மகேஸ்வரி யுவராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவின் இறுதியில் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டன.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...