சனாதன சர்ச்சை - அமைச்சர் உதயநிதியை கண்டித்து கோவையில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்!

சனாதனம் மற்றும் இந்து தர்மத்திற்கு எதிராக பேசிய தமிழக விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து, கோவை செஞ்சிலுவை முன்பாக இந்து முன்னணியை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் கோஷங்களை எழுப்பியபடி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: சனாதனத்திற்கு எதிராக பேசிய அமைச்சர் உதயநிதியை கண்டித்து கோவையில் இந்து முன்னணியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



தமிழகத்தில் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அண்மையில் சனாதனத்திற்கு எதிராக சர்ச்சை கருத்துக்களை பேசி இருந்தார். இதற்கு திராவிட கட்சிகளின் தலைவர்கள் உள்பட பலரும் ஆதரவு தெரிவித்தும், கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.



இந்நிலையில் சனாதனத்திற்கு எதிராக பேசிய அமைச்சர் உதயநிதி மற்றும் திராவிட இயக்கங்களை கண்டித்து கோவை செஞ்சிலுவை முன்பாக இந்து முன்னணியினர் 500க்கும் மேற்பட்டோர் கோஷங்களை எழுப்பியபடி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த இந்து முன்னணியின் மாநில பொதுச் செயலாளர் கிஷோர்குமார் பேசியதாவது,

தொடர்ந்து திமுக இந்து மதத்தைப் பற்றியும், சனாதனத்தை பற்றியும், இழிவாக பேசி வருகிறது. தேர்தல் சமயங்களில் மட்டும் இந்துக்களின் ஓட்டை பெற்று ஆட்சியைப் பிடிக்கும் திமுக, ஆட்சிக்கு வந்த பின்பு சனாதனத்தை ஒழிப்பேன் என்று பேசி இருப்பது இந்துக்களின் மனதை புண்படுத்தி இருக்கிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...