மேட்டுக்கடை - குண்டடம் இடையே 4 வழிச்சாலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்!

பல்லடம் - தாராபுரம் சாலையில் மேட்டுக்கடை முதல் குண்டடம் வரை ரூ.53.40 கோடி மதிப்பீட்டில் இருவழிப்பாதையிலிருந்து நான்கு வழிப்பாதையாக அகலப்படுத்தி மேம்பாடு செய்யப்பட்டதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.



திருப்பூர்: மேட்டுக்கடை முதல் குண்டடம் வரையிலான இருவழிப்பாதையில் இருந்து 4 வழிப்பாதையாக மேம்படுத்தப்பட்ட சாலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.



நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறையின் சார்பில் திருப்பூர் மாவட்டம் பல்லடம் -தாராபுரம் சாலையில் மேட்டுக்கடை முதல் குண்டடம் வரை ரூ.53.40 கோடி மதிப்பீட்டில் இருவழிப்பாதையிலிருந்து நான்கு வழிப்பாதையாக அகலப்படுத்தி மேம்பாட்டு செய்யப்பட்டதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.



இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மாவட்ட ஆட்சித்தலைவர் கிறிஸ்துராஜ் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.



இந்நிகழ்வில், அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பங்கேற்று பேசியதாவது,

தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நெடுஞ்சாலைத்துறையின் சார்பாக பல்வுறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.

அந்த வகையில் இன்றைய தினம், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து நெடுஞ்சாலை துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறையின் சார்பில் திருப்பூர் மாவட்டம், பல்லடம் - தாராபுரம் சாலையில் மேட்டுக்கடை முதல் குண்டடம் வரை 53.40 கோடி மதிப்பீட்டில் இருவழிப்பாதையிலிருந்து நான்கு வழிப்பாதையாக அகலப்படுத்தி மேம்பாட்டு செய்யப்பட்டதை பொது மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்துள்ளார்.



திருப்பூர் நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு வட்டத்திற்குட்பட்ட பல்லடம் தாராபுரம் மாநில நெடுஞ்சாலையின் (SH-174A) மொத்த நீளம் 29.40 கி.மீ இருவழிச்சாலையாகும்.



இச்சாலையில் தமிழ்நாடு முதலமைச்சர் சாலை மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 13.00 கி.மீ நீளமுள்ள சாலை ரூ.93.90 கோடி மதிப்பீட்டில் நான்கு வழித்தடமாக அகலப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...