வால்பாறை அருகே டீசல் ஏற்றி வந்த லாரி சாலையில் கவிழ்ந்து விபத்து!

வால்பாறை அடுத்த வாட்டர்பால்ஸ் பகுதியில் டீசல் ஏற்றி வந்த லாரி ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் தீப்பற்றாத வண்ணம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.



கோவை: வால்பாறை அருகே வாட்டர் பால்ஸ் எஸ்டேட் பகுதியில் டீசல் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் இருந்து வால்பாறை போக்குவரத்து பணிமனைக்கு காளி என்பவர் டீசல் லாரியை ஒட்டி வந்து உள்ளார். அந்த லாரியில் 12 ஆயிரம் லிட்டர் டீசல் இருந்து உள்ளது.



இந்நிலையில், வால்பாறைக்கு வரும் வழியில் வட்டார்பால்ஸ் என்ற இடத்தில் ஓட்டுனரின் கட்டுபாட்டை இழந்த லாரியானது, சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஓட்டுனர் எந்தவித காயமும் இல்லாமல் உயிர் தப்பினார்.



இதனிடையே விபத்தில் சிக்கிய லாரியை ஒட்டி வந்த ஓட்டுனர் தப்பி ஓடிய நிலையில், லாரியில் இருந்து டீசல் சாலையில் வெளியேறி உள்ளது.



இதுகுறித்து தகவலறிந்த தீ அணைப்பு துறையினர் மற்றும் காவல் துறையினரும் சம்பவ இடத்திற்கு வந்து தீ பற்றாத வண்ணம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

சாலையில் ஓரம் பகுதியில் லாரி விழுந்து உள்ளதால் போக்குவரத்துக்கு பாதிப்பு இல்லை. மேலும் லாரியில் உள்ள டீசலை வேறு லாரிக்கு மாற்றப்பட்டு, பின் விபத்துக்குள்ளான லாரியை ஜேசிபி மூலம் அகற்றப்படும் என்று தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...