கோவையில் சட்டவிரோதமாக குப்பை கொட்டிய கட்டுமான நிறுவனத்திற்கு ரூ.4 லட்சம் அபராதம்!

கோவை கிழக்கு மண்டலத்தில் ஹிந்துஸ்தான் கல்லூரியின் பின்புறம் உள்ள குடியிருப்பு கட்டுமான நிறுவன ஊழியர்கள் தங்கியுள்ள இடத்தின் குப்பையை சட்டவிரோதமாக தெருக்களில் கொட்டியதற்காக கோவை மாநகராட்சி நிர்வாகம் ரூ.4 லட்சம் அபராதமாக வசூலித்துள்ளது.


கோவை: கோவையில் சட்டவிரோதமாக தெருக்களில் குப்பைகளை கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக கோவை மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, கோயம்புத்தூர்‌ மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகள்‌, சாலைகள்‌, தெருக்களில்‌ குப்பைகளை கொட்டுவது தொடா்பாக மாநகராட்சி பணியாளா்களால்‌ தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில்‌ கடந்த 30.08.2023 அன்று கிழக்கு மண்டலம்‌, வார்டு எண்‌.50க்கு உட்பட்ட ஹிந்துஸ்தான்‌ கல்லூரி பின் பகுதியில்‌ அடுக்குமாடி குடியிருப்பு கட்டும்‌ நிறுவனத்தில்‌ 200 மேற்பட்டோர்‌ தங்கியுள்ளனர்‌.

அவர்களிடமிருந்து உருவாகும்‌ குப்பைகளை மீனா எஸ்டேட்‌ மற்றும்‌ ஹிந்துஸ்தான்‌ அவென்யூ பகுதிகளில்‌ கொட்டியது கண்டறியப்பட்டு, மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப்‌ உத்தரவின் படி, சுகாதார ஆய்வாளர்‌ ஜீவமுருகராஜ்‌ சம்மந்தப்பட்ட கட்டுமான நிறுவனத்திற்கு ரூ.4 லட்சம்‌ அபராதமாக விதிக்கப்பட்டு, வங்கி வரைவோலையாக இன்று (04.09.2023) பெறப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள்‌, வணிக நிறுவனத்தினர்‌ கோயம்புத்தூர்‌ மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகள்‌, சாலைகள்‌, தெருக்களில்‌ குப்பைகளை கொட்டுவதை தவிர்த்து, அதற்கென தனியே வைக்கப்பட்டுள்ள குப்பைத்‌ தொட்டிகளில்‌ போடுமாறும்‌, இதனை மீறி செயல்படுவோர்‌ மீது மாநகராட்சி அதிகாரிகளால்‌ அபராதம்‌ விதிக்கப்படும்‌.

இவ்வாறு மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப்‌ தெரிவித்துள்ளார்‌.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...