தாராபுரத்தில் ரூ.4 கோடியில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் - காணொலி மூலம் முதலமைச்சர் ஸ்டாலின் திறப்பு

திருப்பூர் மாவட்டம் பஞ்சப்பட்டியில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் சார்பில் ரூ.4.00 கோடி மதிப்பீட்டில் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கட்டடத்தை காணொலி மூலம் முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.



கோவை: வேளாண்மை துறையின் மூலமாக விவசாயிகளுக்காக பல்வேறு பணிகளை செய்து வருகிற தமிழ்நாடு முதலமைச்சருக்கு விவசாயிகள் தொடர்ந்து ஆதரவாக இருக்க வேண்டும் என்று அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தார்.



தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக இன்று திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், பஞ்சப்பட்டியில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் சார்பில் ரூ.4.00 கோடி மதிப்பீட்டில் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கட்டடத்தை திறந்து வைத்தார். இந்தநிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்து கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் செந்தில் அரசன் தலைமை வகித்தார்.

திருப்பூர் மாவட்டத்தில் 15 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. தாராபுரம் பகுதியில் கிட்டங்கி, பரிவர்த்தனைக் கூடம் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் விவசாயிகள் தனியார் கிட்டங்கியில் இருப்பு வைத்து வந்தனர்.

மேலும் அக்கிட்டங்கிகள் தொலைவில் உள்ளதால் போக்குவரத்து செலவு மற்றும் அதிக வாடகை காரணமாக பொருளாதர இழப்பைச் சந்தித்து வந்தனர். இதனால் விவசாயிகளுக்குத் தாராபுரம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தின் பயன்பாடுகளும் சேவையும் முழுமையாக சென்றடையாதயாத நிலை இருந்தது.



இதனடிப்படையில் தாராபுரம் பகுதியில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் கட்டடம் கட்டப்பட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் இன்றைய தினம் விவசாயிகளின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இதில் ரூ.1.30 கோடி மதிப்பீட்டில் 1000 மெ.டன் கிட்டங்கி, ரூ.85.00 இலட்சம் மதிப்பீட்டில் பரிவர்த்தனை கூடம் ரூ.30.00 இலட்சம் மதிப்பீட்டில் அலுவலக கட்டிடம், ரூ.14.00 இலட்சம் மதிப்பீட்டில் உலர்களம், ரூ. 61.00 இலட்சம் மதிப்பீட்டில் குடிநீர் மற்றும் சுகாதர வசதி, ரூ.80.00 இலட்சம் மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் என உட்கட்டமைப்பு மொத்தம் ரூ.4.00 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் இன்று காணொளி காட்சி மூலம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.



இவ்வாறு வேளாண்மை துறையின் மூலமாக விவசாயிகளுக்காக பல்வேறு பணிகளை செய்து வருகிற தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நீங்கள் தொடர்ந்து ஆதரவாக இருக்க வேண்டும் என்று அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தார்.



அதனைத் தொடர்ந்து, வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் சார்பில் வேளாண் இயந்திரங்களை கொண்டு உழவு பணிகள் மற்றும் இதர வேளாண் பணிகளை மேற்கொள்ள ஏதுவாக ரூ.42.40 இலட்சம் மதிப்பிட்டில் ரூ.16.00 இலட்சம் மானியத்தில் 20 விவசாயிகளுக்கு பவர்டில்லர்களை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், இணை இயக்குநர் (வேளாண்மை) மாரியப்பன், வேளாண் பொறியியல்துறை செயற்பொறியாளர் ஜெயக்குமார், திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலத்தலைவர் இல.பதமநாதன், தனி அலுவலர் (திருப்பூர் உதவிப்செயற்பொறியாளர் சரவணக்குமார், உதவிப்பொறியாளர் எஸ்.வி.செந்தில்குமார், முதுநிலை செயலாளர் (பொ) சுரேஷ்பாபு, தாராபுரம் கண்காணிப்பாளர் விற்பனைக்குழு) மகாதேவன், வேளாண் பொறியியல்துறை நிர்மலா, தாராபுரம் ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கமலக்கண்ணன், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...