கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் - கோவையில் ரூ.72.58 மதிப்பில் இயந்திரங்கள் வழங்கல்

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் மூலம் கோவையில் 72.58 லட்சம் மதிப்பில் வேளாண் இயந்திரங்கள் வழங்கப்பட்டது.



கோவை: 82 பவர் டில்லர்கள் மற்றும் 7 பவர் வீடர்கள் இயந்திரங்கள் 72.58 லட்சம் மதிப்பில் விவசாயிகளுக்கு 40% மற்றும் பெண் விவசாயிகளுக்கு 50% மானியத்தில் கோவை பாராளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் வழங்கினார்.



தமிழ்நாடு வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் வேளாண் இயந்திர மயமாக்கும் துணை இயக்கத் திட்டத்தின் கீழ் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் மூலம் கிராம மக்களுக்கு மானியத்தில் வேளாண் இயந்திரங்கள் வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி வாயிலாக துவக்கி வைத்தார்.



அதன்படி கோவை மாவட்டத்தில் 82 பவர் டில்லர்கள் மற்றும் 7 பவர் வீடர்கள் இயந்திரங்கள் 72.58 லட்சம் மதிப்பில் விவசாயிகளுக்கு 40% மற்றும் பெண் விவசாயிகளுக்கு 50% மானியத்தில் வழங்கப்பட்டது.



கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் கோவை பாராளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு இந்த இயந்திரத்தை வழங்கினார்.



இந்நிகழ்வில் கோவை மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா உட்பட கோவை மாவட்ட வேளாண் பொறியியல் துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...