துடியலூரில் உள்ள ராஜகணபதி கோவிலில் கும்பாபிஷேகம் - சுற்றுவட்டாரப்பகுதி பக்தர்கள் பங்கேற்பு

கோவை துடியலூரை அடுத்த தொப்பம்பட்டி பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு அரசடி ஸ்ரீ இராஜகணபதி திருக்கோவில் மற்றும் அருள்மிகு சிவகாமி அம்பிகை சமேத அருள்மிகு ஸ்ரீ வெள்ளிமலை சிவசங்கரேஸ்வரர் திருக்கோவிலில் நூதன ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.



கோவை: அருள்மிகு அரசடி ஸ்ரீ இராஜகணபதி திருக்கோவில் மற்றும் அருள்மிகு சிவகாமி அம்பிகை சமேத அருள்மிகு ஸ்ரீ வெள்ளிமலை சிவசங்கரேஸ்வரர் திருக்கோவிலில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் சுற்று வட்டாரங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் மகா அன்னதானம் வழங்கப்பட்டது.

கோவை துடியலூரை அடுத்த தொப்பம்பட்டி பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு அரசடி ஸ்ரீ இராஜகணபதி திருக்கோவில் மற்றும் அருள்மிகு சிவகாமி அம்பிகை சமேத அருள்மிகு ஸ்ரீ வெள்ளிமலை சிவசங்கரேஸ்வரர் திருக்கோவில். இக்கோவில் திருப்பணிகள் சாக்த ஸ்ரீ வாராகி மணிகண்ட சுவாமிகள் நல்லாசியுடன் நடைபெற்று கும்பாபிஷேக பணிகள் நடைபெற்றன.

இதையடுத்து கோவிலில் நூதன ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா கடந்த வியாழக்கிழமை கிராம தேவதை வழிபாட்டுடன் தொடங்கி முளைப்பாரி, தீர்த்தக் குட ஊர்வலம் நடைபெற்றது. தொடர்ந்து வெள்ளிக்கிழமை முதற்கால வேள்வி பூஜைகள் நடைபெற்றன. சனிக்கிழமை இரண்டாம் கால யாகம், மூன்றாம் கால யாகங்கள் நடைபெற்றன.



இன்று காலை நான்காம் கால யாக பூஜைகள் நடைபெற்று கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி நூதன ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை காரமடை சிவஸ்ரீ ஆதியோகேஸ்வர சிவம் குழுவினர் நடத்திவைத்தனர்.



தொடர்ந்து அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்றன.



இதில் சுற்று வட்டாரங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் மகா அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...