வரும் 6ம் தேதி முதல் ஆவின் பால் பாக்கெட் ஊதா நிறத்திற்கு மாற்றம்.. கோவை மாவட்ட ஆட்சியர் தகவல்..!

பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வந்த பச்சை நிற ஆவின் பால் பாக்கெட், இனி ஊதா நிறத்தில் விநியோகம் செய்யப்பட உள்ளதாக கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் அறிவித்துள்ளார்.


கோவை: வரும் 6ம் தேதி முதல் அனைத்து மாவட்ட ஒன்றியங்களிலும் ஒரே வண்ண பாக்கெட்டுகளை அறிமுகம் செய்யும் வகையில், ஆவின் COW MILK (3.5FAT - 8.5 SNF) என்ற பெயருக்கு பதிலாக ஆவின் டிலைட் (Aavin delight) (3.5FAT-8.5 SNF) என்ற பெயரில் ஊதா நிற (purple) பாக்கெட்டுகளில் பால் விநியோகம் செய்யப்படவுள்ளது.

பச்சை நிற ஆவின் பால் பாக்கெட் ஊதா நிறத்தில் விநியோகம் செய்யப்பட உள்ளதாக கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், கோயம்புத்தூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் கடந்த 01.02.2023 தேதி முதல் நான்காம் தேதி வரை ஆவின் பசும்பால் COW MILK (3.5 FAT - 8.5 SNF) என்ற பெயரில் 250ml, 500 ml ஆகிய அளவுகளை கொண்ட பால் பாக்கெட்டுகள் பச்சை நிற வண்ணத்தில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

வரும் 6ம் தேதி முதல் அனைத்து மாவட்ட ஒன்றியங்களிலும் ஒரே வண்ண பாக்கெட்டுகளை அறிமுகம் செய்யும் வகையில், ஆவின் COW MILK (3.5FAT - 8.5 SNF) என்ற பெயருக்கு பதிலாக ஆவின் டிலைட் (Aavin delight) (3.5FAT-8.5 SNF) என்ற பெயரில் ஊதா நிற (purple) பாக்கெட்டுகளில் பால் விநியோகம் செய்யப்படவுள்ளது.

மேலும் பாலின் கொழுப்பு மற்றும் இதர சத்துகளில் எந்தவித மாற்றமும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். ஆதலால், இந்த ஆவின் டிலைட் (Aavin delight-3.5% FAT-8.5% SNF) ஊதா நிற (purple) ஆவின் பால் பாக்கெட்டுகளை பொதுமக்கள் வாங்கி பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...