வால்பாறையில் மைதானத்தில் ஆட்டம் போட்ட காட்டு யானைகள்..!! வனப்பகுதிக்குள் விரட்டியடித்த வனத்துறையினர்

கோவை மாவட்டம் வால்பாறையில் முடீஸ் எஸ்டேட் பகுதியில் உள்ள ஸ்டாப் கிளப் மைதானத்தில், காட்டு யானைகள் அங்கும், இங்கும் ஆட்டம் போட்டதை பொதுமக்கள் அமைதியாக நின்று வேடிக்கை பார்த்தனர்.



கோவை: வனப்பகுதியில் இருந்து வெளியேறிய எட்டு காட்டுயானைகள், மைதானத்தில் உலா வந்தன. தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் அடந்த வனப்பகுதிக்குள் காட்டு யானைகளை விரட்டியடித்தனர்.

கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. காட்டு யானைகள் வனப்பகுதியையொட்டிய ஆற்றங்கரையோரம், தேயிலை தோட்டம் பகுதிகளிலும் சுற்றி வருகிறது. இதை பொதுமக்கள் சுற்றுலா பயணிகள் கண்டு களித்து வருகின்றனர்.



இந்நிலையில் இன்று மாலை முடீஸ் எஸ்டேட் பகுதியில் உள்ள ஸ்டாப் கிளப் மைதானத்தில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய எட்டு காட்டு யானைகள் மைதானத்தில் இறங்கி விளையாடின. இதை அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் பார்த்து ரசித்தனர்.



காட்டு யானைகள் மைதானத்தில் அங்கும் இங்கும் நடந்து செல்லும் காட்சி அழகாக இருந்தது. தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் சிறிது நேரத்தில் காட்டு யானைகளை அப்பகுதியில் இருந்து வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...