அரியலூர் அனிதா நினைவு நாள்: கோவையில் திமுகவினர் அஞ்சலி... திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை..

நீட் தேர்வு தோல்வியால் கடந்த 2017ல் தற்கொலை செய்துகொண்ட அரியலூரைச் சேர்ந்த மாணவி அனிதாவின் நினைவு நாளை ஒட்டி கோவை வீரபாண்டி பிரிவு பகுதியில் திமுக சார்பில் மலர் அஞ்சலி செலுத்தினர்.



கோவை: நீட் என்ற ஆட்கொல்லி தேர்வால் உயிரிழந்த அனிதாவின் நினைவு நாளையொட்டி, அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப்படத்திற்கு திமுகவினர் மலர் அஞ்சலி செலுத்தி வணங்கினர்.

கடந்த 2017ம் ஆண்டு நீட் தேர்வு முறையை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்று போராடிய அரியலூரைச் சேர்ந்த மாணவி அனிதா இதே நாளில் தற்கொலை செய்து கொண்டார்.

அது அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து திமுகவினர் ஆண்டுதோறும் அவரது நினைவு நாளில் அனிதாவின் திருவுருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தி வருகின்றனர். திமுக சார்பில் அனிதா அச்சீவர் அகாடமி என்ற பெயரில் இலவச பயிற்சியுடன் கூடிய வேலை வாய்ப்பை பெறும் வகையில் பயிற்சி வழங்கி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று அனிதாவின் நினைவு நாளில் தமிழகம் முழுவதும் திமுகவினர் அவரது திருவுருவப் படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.



இதன் ஒரு பகுதியாக கோவை வீரபாண்டி பிரிவு பகுதியில் திமுக சார்பில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அனிதாவின் திருவுருவப் படத்திற்கு கூடலூர் கவுண்டம்பாளையம் நகராட்சி தலைவர் அறிவரசு தலைமையில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.



இதில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என கோரி கோஷங்களை எழுப்பினர்.



இந்த நிகழ்ச்சியில் திமுக கவுன்சிலர்கள், பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...