கல்வி நிரம்பி வழிகிறதா என்று பார்க்கிறது திராவிட மாடல்! கழிவறை நிரம்பி வழிகிறதா என்று பார்க்கிறது ஆரிய மாடல்! கோவையில் திமுகவினர் போஸ்டர்

கோவை மாநகரில் திமுக சார்பில் பல்வேறு பகுதிகளில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதில் "கல்வி நிரம்பி வழிகிறதா என்று பார்க்கிறது திராவிட மாடல்! கழிவறை நிரம்பி வழிகிறதா என்று பார்க்கிறது ஆரிய மாடல்" என்ற வாசகங்களுடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.


கோவை: காலை சிற்றுண்டி திட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் தினமலர் நாளிதழில் நேற்று செய்தி வெளியிடப்பட்டது. இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், திமுகவினர் போஸ்டர் மூலம் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தமிழக அரசின் காலை சிற்றுண்டி திட்டம் அனைவரது மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், நேற்றைய தினம் தினமலர்(திருச்சிப்பதிப்பு) நாளிதழில் காலை சிற்றுண்டி திட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் செய்தி தலைப்புடன் செய்தி வெளியாகியிருந்தது.

அதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். நேற்று தமிழகத்தில் பல்வேறு பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டமும், தினமலர் நாளிதழ் எரிப்பு போராட்டங்களும் நடைபெற்றன.

அரசு பள்ளி மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கோவை மாநகரில் திமுக சார்பில் பல்வேறு பகுதிகளில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதில் "கல்வி நிரம்பி வழிகிறதா என்று பார்க்கிறது திராவிட மாடல்! கழிவறை நிரம்பி வழிகிறதா என்று பார்க்கிறது ஆரிய மாடல்" என்ற வாசகங்களுடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...