கோவையில் வாக்கு சாவடி பட்டியல் திருத்த ஆய்வு கூட்டம்..! அரசியல் கட்சியினர் பங்கேற்பு!

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வாக்கு சாவடி பட்டியல் திருத்தம் தொடர்பான ஆய்வு கூட்டம், மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அலுவலருமான கிராந்திகுமார் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது இருந்த வாக்கு சாவடிகள், புதிதாக தேவைப்படும் வாக்குசாவடிகள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.



கோவை: மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டறங்களில் நடைபெற்ற வாக்குசாவடி பட்டியல் திருத்தம் தொடர்பான ஆய்வு கூட்டத்தில் வாக்குசாவடி பட்டியல் திருத்தம் தொடர்பான ஆய்வு கூட்டத்தில் கடந்த முறை வாக்குச்சாவடியில் ஏற்பட்ட சில தொழில்நுட்ப சிக்கல் குறித்தும் அவை இம்முறை களையபடுவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக பேசிப்பட்டது.

வாக்குசாவடி பட்டியல் திருத்தம் தொடர்பான ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதற்கான பணிகள் மாவட்டம் தோறும் அரசு சார்பில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வாக்கு சாவடி பட்டியல் திருத்தம் தொடர்பான ஆய்வு கூட்டம், மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அலுவலருமான கிராந்திகுமார் தலைமையில் நடைபெற்றது.



இதில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் உட்பட தாசில்தார்கள் கலந்து கொண்டனர். கோவை மாவட்டத்தில் கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது இருந்த வாக்கு சாவடிகள், புதிதாக தேவைப்படும் வாக்குசாவடிகள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.

கடந்த முறை வாக்குச்சாவடியில் ஏற்பட்ட சில தொழில்நுட்ப சிக்கல் குறித்தும் அவை இம்முறை களையபடுவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

மேலும் கட்சியினரின் பல்வேறு சந்தேகங்களுக்கு மாவட்ட ஆட்சியரும் சம்பந்தப்பட்ட தாசில்தார்களும் விளக்கமளித்தனர். இதில் மலைப்பகுதிகளில் இருக்கும் கிராம மக்கள் வாக்களிப்பதில் உள்ள சிரமங்கள் குறித்து அரசியல் கட்சியினர் எடுத்துரைத்தனர். இதில் அரசியல் கட்சியினர் தாசில்தார்கள் கூறிய அனைத்து விஷயங்களும் குறிப்பெடுக்கப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனர்.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...