பல்லடத்தில் உள்ள டாஸ்மாக் கடையை எடுக்க வேண்டும்..! போராட்டம் நடத்தி அதிமுக எதிர்ப்பு.!

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் கொச்சின் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள 1850 எண் கொண்ட டாஸ்மாக் கடையால், பெண்களுக்கு அச்சுறுத்தல் உள்ளதாக கூறி அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்ட வட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.



திருப்பூர்: பல முறை புகார் அளித்தும் டாஸ்மாக் கடையை எடுக்க நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்பிறகும் நடவடிக்கை எடுக்காவிட்டால் விளைவு வேறமாதிரி இருக்கும் என அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் கொச்சின் நெடுஞ்சாலையில் 1850 எண் கொண்ட டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. நெடுஞ்சாலை இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள இந்த கடையில் பார் வசதி கிடையாது. மேலும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தினந்தோறும் பயன்படுத்திவரும் இந்த சாலையில் டாஸ்மாக் கடைக்கு அருகே நூற்றுக்கணக்கானோர் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் மேற்படி டாஸ்மாக் கடையில் மது வாங்கி கொண்டு சாலையிலேயே அமர்ந்து நிதானமாக மது அருந்திவிட்டு சாலை ஓரமாகவே அலங்கோலமாக துணி விலகியது கூட தெரியாமல் சாலையில் விழுந்து கிடக்கின்றனர். மேலும் பெண்கள் குழந்தைகள் வெளியில் நடமாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

போக்குவரத்து நெருக்கடி அதிகம் உள்ள இப்பகுதியில் டாஸ்மாக் கடையால் விபத்துக்கள் அதிக அளவில் நடைபெற்றுவருகிறது. டாஸ்மாக் கடையை அகற்ற கோரி கடந்த சில தினங்களுக்கு முன்பாக முன்னாள் அமைச்சரும் பல்லடம் சட்டமன்ற உறுப்பினரும் அதிமுக வை சேர்ந்த எம்.எஸ்.எம். ஆனந்தன் தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது.



இந்நிலையில் நடவடிக்கை எடுக்காததால் இன்று அதிமுக சார்பில் பல்லடம் நகர தலைவர் ராமமூர்த்தி தலைமையில் வட்டாட்சியர் அலுவலகத்தை அதிமுகவினர் முற்றுகையிட்டு புகார் மனு அளித்தனர். புகாரை பெற்றுக்கொண்ட வட்டாட்சியர் ஜெய்சிங் சிவக்குமார் டாஸ்மாக் கடை அகற்றப்படும் என்று உறுதி அளித்தார்.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...