கோவையில் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் வளர்ச்சி பணிகள்..! மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு.!

கோவை மாவட்டம் கோட்டூர் பேரூராட்சி மலையாண்டிபட்டினம் மனோன்மணி செல்லமுத்து அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவியர்களுக்கு நிர்வாகத்துடன் இணைந்து ரோபோடிக்ஸ் பயிற்சி பாரதி அறக்கட்டளை ஆழியாறு அறக்கட்டளை வழங்கி வருவதை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழக மேலாண் இயக்குனருமான ஜெயஸ்ரீ முரளிதரன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.


கோவை: கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியம் நல்லட்டிபாளையம் ஊராட்சியில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் கட்டப்பட்டு வரும் குடியிருப்புகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஜெயஸ்ரீ முரளிதரன் நேரில் பார்வையிட்டார்.

கோவை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழக மேலாண் இயக்குனருமான ஜெயஸ்ரீ முரளிதரன் கோவையில் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.



அதன்படி கோவை மாவட்டம் கோட்டூர் பேரூராட்சி மலையாண்டிபட்டினம் மனோன்மணி செல்லமுத்து அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவியர்களுக்கு நிர்வாகத்துடன் இணைந்து ரோபோடிக்ஸ் பயிற்சி பாரதி அறக்கட்டளை ஆழியாறு அறக்கட்டளை வழங்கி வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



அதனைத் தொடர்ந்து கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியம் நல்லட்டி பாளையம் ஊராட்சியில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் கட்டப்பட்டு வரும் குடியிருப்புகளை பார்வையிட்டார்.



சமத்தூர் பேரூராட்சி ஐந்தாவது வார்டில் சாலை அமைக்கும் பணிகளையும் ஆய்வு மேற்கொண்டார்.



பின்னர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் கோவை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்நிகழ்வுகளில் கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் உட்பட பல்வேறு அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...