துடியலூர் அருகே அதுல்யா சீனியர் கேர் சார்பில் மூத்த குடிமக்களுக்கான ப்ரீமியர் குடியிருப்பு திறப்பு!

துடியலூர் அருகே அதுல்யா சீனியர் கேர் சார்பில் மூத்த குடிமக்களுக்கான ப்ரீமியர் குடியிருப்பை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் மற்றும் மாநகராட்சி ஆணையர் பிரதாப் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்.



கோவை: துடியலூர் அருகே அதுல்யா சீனியர் கேர் சார்பில் மூத்த குடிமக்களுக்கான ப்ரீமியர் குடியிருப்பு இன்று திறக்கப்பட்டது.

கோவை துடியலூர் அருகே அதுல்யா சீனியர் கேர் சார்பில் மூத்த குடிமக்களுக்கான ப்ரீமியர் குடியிருப்பு திறக்கப்பட்டது.



இதனை கோயம்புத்தூர் மாநகர காவல்துறை ஆணையர் வி.பாலகிருஷ்ணன் மற்றும் கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் பிரதாப் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி குத்து விளக்கு ஏற்றி வைத்து திறந்து வைத்தனர்.



சுமார் 70 ஆயிரம் சதுர அடியில் அமைந்துள்ள இந்த வளாகத்தில் 100 படுக்கை வசதிகளுடன் கூடிய தொகுப்பு வீடுகள் உள்ளன. நாம் சொந்த வீட்டில் இருப்பது போன்ற உணர்வையும், சூழ்நிலையும் இங்கு ஏற்படுகின்றன. மேலும் மருத்துவர் மற்றும் இதர பணியாளர்கள் 24 மணி நேரமும் உள்ளனர்.



இதனால் முதியோர்களுக்கு 24 மணி நேரமும் மருத்துவ பராமரிப்பும், தனிப்பட்ட கவனிப்பும் கிடைகிறது. மருத்துவ ஆதரவு, நலவாழ்வு செயல்திட்டங்கள், பொழுதுபோக்கு நடவடிக்கைகள், விளையாட்டுகள், நூலகம், உடல்நலத்தைப் பேணுவதற்காக முதியோர்களுக்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட உணவுமுறை திட்டங்களுடன் அமைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து அதுல்யா சீனியர் கேர் -ன் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அலுவலர் ஜி. ஸ்ரீனிவாசன் கூறியதாவது, மூத்த குடிமக்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் மாறிவரும் விருப்பங்களை பூர்த்தி செய்வதற்காக இம்மாதிரி திட்டம் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது என்று தெரிவித்தார்.

அதுல்யா சீனியர் கேர் – ன் நிறுவனரும், நிர்வாக இயக்குனருமான டாக்டர். ஆர். கார்த்திக் நாராயண் கூறியதாவது, இந்த வளாகத்தில் குடியிருக்கும் மூத்த குடிமக்கள் மிகவும் மகிழ்ச்சியோடும், மனநிறைவோடும் வாழ்க்கையை நடத்த சிறாப்பான சூழலை நாங்கள் வழங்குகிறோம் என்று தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியின் போது, கோயமுத்தூரில் இருந்து பல முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...