தாய்மார்களின் சகோதரனாக பிரதமர் மோடி மானியத்தை உயர்த்தி கேஸ் விலையை குறைத்துள்ளார் - வானதி சீனிவாசன் பெருமிதம்!

கோவை தெப்பக்குளம் மைதானத்தில் நடைபெற்ற ரக்‌ஷா பந்தன் விழாவில் பங்கேற்ற பாஜக மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன், உஜ்வாலா திட்டத்தின் கீழ் 75 லட்சம் மக்கள் பயனடைந்து உள்ளதாக தெரிவித்தார்.


கோவை: தாய்மார்களின் சகோதரனாக மானியத்தை உயர்த்தி கேஸ் விலையை பிரதமர் மோடி குறைத்துள்ளார் என பாஜக மகளிரணி தேசிய தலைவரும், கோவை தெற்கு எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.



கோவை பூ மார்க்கெட் அருகில் உள்ள தெப்பக்குளம் மைதானத்தில் முன் களப் பணியாளர்கள் ஆட்டோ ஓட்டுநர்களுடன் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கலந்து கொண்டு ரக்ஷா பந்தன் விழாவை கொண்டாடினார்.



பின்னர் முன் கள பணியாளர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நலத் திட்ட உதவிகள் மற்றும் ரக்ஷா பந்தன் கயிறு கட்டி ரக்ஷா பந்தன் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இந்த விழாவில் பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் பேசியதாவது,



ரக்ஷா பந்தன் மற்றும் ஓணம் பண்டிகையை ஒட்டி இந்திய நாட்டு சகோதரிகள் நலம் பெறும் வகையில் ஒரு சகோதரனாக சமையல் கேஸ் விலையை குறித்து மானியத்தை அதிகப்படுத்தி உள்ளார். ஒரு சகோதரனாக, சகோதரிக்கு அண்ணன் செய்வதை போன்று நாட்டு மக்களுக்கு மோடி மானியத்தை குறைத்து உள்ளார்.

நாட்டிலேயே 75 லட்சம் மக்கள் உஜ்வாலா திட்டத்தின் கீழ் பயனடைந்து இருக்கிறார்கள். இது வரவேறக் கூடிய ஒன்று நாட்டு மக்கள் சகோதரிகள் இதனால் நலம் பெற உள்ளனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...