கோவையில் பணியில் சிறப்பாக செயல்பட்ட காவல்துறையினர்..! - பாராட்டி சான்றிதழ் வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

கோவை மாவட்டத்தில் பணியில் சிறந்து விளங்கிய பெருமாள், சுரேஷ், ரஞ்சித்குமார் ஆகிய காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் பாரட்டி வாழ்த்து தெரிவித்தார்.


கோவை: ரயிலில் குதித்து தற்கொலைக்கு முயன்ற ஒரு நபரை, அவரிடம் பேசி தற்கொலை எண்ணத்தை மாற்றி உயிரை காப்பாற்றி, குடும்பத்தினரிடம் ஒப்படைத்த கோவில்பாளையம் தனிப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் பெருமாளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் பாரட்டி வாழ்த்து தெரிவித்தார்.

கோவை மாவட்டம் கோவில்பாளையம் பகுதியில் ரயிலில் குதித்து தற்கொலைக்கு முயன்ற ஒரு நபரை, அவரிடம் பேசி தற்கொலை எண்ணத்தை மாற்றி உயிரை காப்பாற்றி, குடும்பத்தினரிடம் கோவில்பாளையம் தனிப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் பெருமாள் ஒப்படைத்தார்.

இதேபோல், கோவில்பாளையம் பகுதியில் சட்டத்திற்கு விரோதமாக 600 கிலோ ரேஷன் அரிசி கடத்திய நபர்களை காவலர் சுரேஷ் அதிரடியாக களத்தில் இறங்கி பிடித்தார்.

பீளமேடு அருகே பொதுமக்களை மிரட்டும் வகையில் கத்தி வைத்துக் கொண்டிருந்த நபரை பிடித்து அதிரடிப்படையைச் சேர்ந்த காவலர் ரஞ்சித் குமார் காவல்நிலையத்தில் ஒப்படைத்தார்.

இந்த மூன்று பேரையும், இன்று (30.08.2023) மாவட்ட காவல் அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.



மூன்று காவலர்களின் இந்த நற்செயலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் பாராட்டி, சான்றிதழ் வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...