சமுதாயத்தை பிளவுபடுத்தும் சக்திகளை நாம் புறக்கணிக்க வேண்டும்..! - பாஜக நிர்வாகி வேலூர் இப்ராஹிம் பேட்டி

மத உணர்வுகளை தூண்டி சமுதாயத்தை பிளவுபடுத்தும் சக்திகளை நாம் புறக்கணிக்க வேண்டும் என கோவை துடியலூரில் நடைபெற்ற அனைத்து சமூதாய பிரார்த்தனைக் கூட்டத்தில் பாஜக சிறுபான்மையினர் பிரிவின் தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் தெரிவித்தார்.



கோவை: அவரவர் மதத்தினுடைய கோட்பாடுகளை, கொள்கைகளை கோவில்களிலோ தேவாலயங்களிலோ, மசூதிகளிலோ பேசலாம் பொது இடங்களில் அவற்றைப் பேசும் போது தவறான புரிதலை பொதுமக்களுக்கு ஏற்படுத்தி விடுகிறது என்று வேலூர் இப்ராஹிம் கூறினார்.

கோவை துடியலூர் உள்ள புதிய வாழ்வு நகர தேவாலயத்தில் அனைத்து சமுதாயத்தினர் கலந்து கொண்ட சமத்துவ பிரார்த்தனை நிகழ்வு நடந்தது.



இதில் தேவாலயத்தின் போதகர் இமானுவேல் ஜேக்கப், மலுமிச்சம்பட்டி நாகசக்தி தியான பீடத்தின் பீடாதிபதி ஸ்ரீலஸ்ரீ பாபுஜி சுவாமிகள், பாஜக சிறுபான்மையினர் பிரிவின் தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதில், பாஜகவின் சிறுபான்மையினர் பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அதில் இந்தியா புதிய வல்லரசாக உருவெடுத்து வருகிறது. இந்த சூழ்நிலையில் மத உணர்வுகளைத் தூண்டி பாரதத்தை பிரித்தாளும் பணிகளில் பலர் ஈடுபட்டு வருகின்றனர்.

அதை மக்கள் புரிந்து கொண்டு புறக்கணிக்க வேண்டும். எல்லா மதத்தினரும் தங்களுடைய புனிதமான வார்த்தைகளை போராட்டங்களுக்கு பயன்படுத்துவதால் அவர்களை எதிர்மறை கருத்து கொண்டவர்களாக பொதுமக்கள் நினைக்கும் சூழல் உருவாகிறது. ஆகவே அவரவர் மதத்தினுடைய கோட்பாடுகளை, கொள்கைகளை கோவில்களிலோ தேவாலயங்களிலோ, மசூதிகளிலோ பேசலாம் பொது இடங்களில் அவற்றைப் பேசும் போது தவறான புரிதலை பொதுமக்களுக்கு ஏற்படுத்தி விடுகிறது.

இதனை அனைத்து மதத்தினரும் தவிர்க்க வேண்டும். சகோதரத்துவம், அன்பு, விட்டுக்கொடுத்தல், ஒருமைப்பாடு போன்றவற்றை தான் அனைத்து மதங்களும் நமக்கு கற்பிக்கின்றன. மற்றவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அவரவர் மதங்களின் செயல்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் என்றார்.

தொடர்ந்து கோவை மாவட்டத்தில் மழை பெய்யவும், வறட்சி நீங்கவும் மும்மத பிரார்த்தனை நடைபெற்றது.



இதில் விஸ்வகர்மா சங்க உறுப்பினர்கள் மற்றும் தேவாலயத்தை சார்ந்தவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...