இளம் குற்றவாளிகளை தடுக்க ஆபரேஷன் ரீபூட்…! ஒரு வருடத்தில் 173 குழந்தைகள் மீண்டும் பள்ளியில் சேர்ப்பு - காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் நெகிழ்ச்சி..!!

கோவை மாநகர காவல்துறை சார்பில் ஆபரேஷன் ரீபூட் என்ற திட்டத்தின் மூலம் 173 இடைநிற்றல் பள்ளி மாணவர்கள் மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுடன் காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கலந்துரையாடி நல்ல கருத்துகளை பதிவு செய்தார்.



கோவை: தொடர்ச்சியாக நடைபெற்ற 3 வழிப்பறி சம்பவங்களை கண்டுபிடிக்க 3 தனிப்படைகள் அமைத்துள்ளோம் எனவும் அவர்களை நெருங்கிவிட்டோம் எனவும் கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

கோவை மாநகர காவல்துறை சார்பில் ஆபரேஷன் ரீபூட் என்ற திட்டத்தின் மூலம் 173 இடைநிற்றல் பள்ளி மாணவர்கள் மீண்டும் பள்ளியில் சேர்க்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்ட மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் உடனான சந்திப்பு நிகழ்ச்சி மாநகர காவலர் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது.



இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள், காவலர்கள் கலந்து கொண்டனர்.



இந்நிகழ்வில் காவல் துறையினர், மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் இத்திட்டம் குறித்து உரையாடினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன்,



இளம் குற்றவாளிகளை தடுக்கும் வகையில் பள்ளி இடை நிற்றல் குழந்தைகளை ஆப்ரேசன் ரீபுட் என்ற திட்டம் மூலம் மீண்டும் படிக்க வைக்கும் திட்டம் அறிமுக செய்து வைக்கப்பட்டது.

போலீஸ் அக்கா திட்டத்தின் மூலம் பணியாற்றும் காவலர்கள், இடைநிற்றல் குழந்தைகளை கண்டறிந்து பேசியதாகவும், பின்னர் கோவை மாநகரில் 173 குழந்தைகளை பள்ளியில் மீண்டும் சேர்த்துள்ளதாகவும் கூறினார்.

20 குழந்தைகள் வெளி மாநிலத்தில் உள்ளதாகவும் இன்னும் 30 குழந்தைகளிடம் பேசி வருவதாகவும் தெரிவித்தார். இதற்கு உறுதுணையாக இருந்த கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு நன்றிகளையும் தெரிவித்து கொண்டார்.

பள்ளி குழந்தைகள் தொடர்ந்து பள்ளிக்கு செல்ல வேண்டும் எனவுன் மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இடை நிற்றல் குழந்தைகளை தொடர்ந்து கண்காணிக்கவும் திட்டமிட்டுள்ளதாக கூறினார். எதிர்கால வாய்ப்புகளை எடுத்துக்கூறி அவர்களை படிக்க வைக்க திட்டமிட்டுள்ளோம் எனவும் தெரிவித்தார். 3 மாதங்களுக்கு ஒருமுறை இடை நிற்றல் மாணவர்களை ஒருங்கிணைத்து கூட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். கோவையில் தொடர்ச்சியாக நடைபெற்ற 3 வழிப்பறி சம்பவங்களை கண்டுபிடிக்க 3 தனிப்படைகள் அமைத்துள்ளோம் எனவும் அவர்களை நெருங்கிவிட்டோம் எனவும் தெரிவித்தார்.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...