கோவையில் புத்ரி திட்டத்தின் உத்யோக் உத்சவ் 2023' நிகழ்ச்சி!

அவதார் ஹியூமன் கேபிடல் டிரஸ்ட் சார்பில் புத்ரி திட்டத்தின் உத்யோக் உத்சவ் 2023' வடகோவையில் உள்ள அவிநாசிலிங்கம் மகளிர் பல்கலையில் நடைபெற்றது. இதில், மாநகராட்சி ஆணையர் பிரதாப் கலந்து கொண்டு, குத்து விளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார்.


கோவை: வடகோவையில் உள்ள அவினாசிலிங்கம் மகளிர் கல்லூரியில் புத்ரி திட்டத்தின் `உத்யோக் உத்சவ் 2023' வெகு விமர்சையாக நடைபெற்றது.



அவதார் குழுமத்தின் தன்னார்வ தொண்டு நிறுவனமான அவதார் ஹியூமன் கேபிடல் டிரஸ்ட் சார்பில் புத்ரியின் 8வது பதிப்பு மற்றும் அவிநாசிலிங்கம் மகளிர் பல்கலைக்கழகம் இணைந்து 'உத்யோக் உத்சவ் 2023' நிகழ்ச்சி வடகோவையில் உள்ள அவினாசிலிங்கம் மகளிர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.



நிகழ்ச்சிக்கு, முதன்மை விருந்தினராக கோவை மாநகராட்சி ஆணையர் பிரதாப் பங்கேற்று குத்து விளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.அவதார் ஹியூமன் கேபிடல் டிரஸ்ட் அறங்காவலர் உமாசங்கர் கந்தசாமி வரவேற்புரை வழங்கினார்.

அவதார் ஹியூமன் கேபிடல் டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் சௌந்தர்யா ராஜேஷ் தலைமை தாங்கினார். அவிநாசிலிங்கம் பல்கலைக்கழக துணை வேந்தர் பாரதி ஹரிசங்கர் முன்னிலை வகித்தார்.

புத்ரி திட்டம் என்பது இந்தியாவின் முதல் வளர்ச்சித் திட்டமாகும். இத்திட்டத்தின் மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கி உள்ள மாணவிகளிடையே தொழில் நோக்கத்தை உருவாக்க உதவுகிறது. ஆறு ஆண்டுகளுக்கு முன்பு அவதார் ஹியூமன் கேபிடல் அறக்கட்டளையால் தொடங்கப்பட்ட காலத்திலிருந்து, புத்ரி திட்டத்தில் புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் 10 மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் 11,000 க்கும் மேற்பட்ட மாணவிகளின் தரத்தை மாற்றியுள்ளது.

உத்யோக் உத்சவ், புத்ரி திட்ட முயற்சியானது, இந்தியாவின் பின்தங்கிய பெண்களின் கல்விப் படிப்புகள் மற்றும் வாழ்க்கைப் பாதைகளை மாற்றியுள்ளது.



அவிநாசிலிங்கம் மகளிர் பல்கலைக்கழக வளாகத்தில் இன்று நடைபெற்ற உத்யோக் உத்சவ் 2023 நிகழ்ச்சியில், ஒன்பது அரசு மற்றும் மாநகராட்சிப் பள்ளிகளைச் சேர்ந்த 450க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.

இந்த கருத்தரங்கில் மாணவிகள் தங்களை திறனை மேம்படுத்தும் விதமாக பாதுகாப்பு, தகவல் தொடர்பு திறன், திட்ட மேலாண்மை திறன், குழு விவாதம் உள்ளிட்டவை கற்பிக்கப்பட்டது. இதன் மூலம் அவர்கள் பள்ளிகளில் இருந்து கல்லூரி மற்றும் நிறுவனத்திற்கு வேலைக்கு செல்வதற்கு தங்களைச் சிறந்த மாணவிகளாக உருவாக்குவதே அவதார் ஹியூமன் கேபிடல் டிரஸ்டின் முக்கிய நோக்கமாக கொண்டுள்ளது.

நிகழ்ச்சியில் அவதார் குழுமத்தின் நிர்வாக அறங்காவலர் டாக்டர் சவுந்தர்யா ராஜேஷ்,பேசியதாவது, "புள்ளி விவரங்களின்படி, இந்தியாவில் பெண் பணியாளர்களின் பங்களிப்பு 24 சதவீதமாக உள்ளது. இந்தியாவில் பெண்களுக்கான வேலை வாய்ப்புகள் பிரகாசமாக வளர்ந்துள்ளன. “உத்யோக் உத்சவ் நிகழ்ச்சி மூலம் பெண்களின் தனி திறமைகளுக்கென இந்தியாவில் வேலைவாய்ப்புகள் அதிக அளவில் கிடைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் பிரதாப் தனது உரையில், “பெண் கல்வி என்பது ஒட்டுமொத்த தேசத்தின் நலனுக்கானது.புத்ரி திட்டம் பெண் மாணவர்களிடம் தொழில் நோக்கத்தை ஊக்குவிக்கிறது, சந்திரயான் 3 இல் பணிபுரிந்த 50 க்கும் மேற்பட்ட பெண் விஞ்ஞானிகளால் நிரூபிக்கப்பட்டு அவர்கள் முன்னேற்றத்திற்கும் வெற்றிக்கும் திறவுகோலாக உள்ளனர். நான் முதல்வன் போன்ற அரசின் முன்முயற்சிகளும் பெண்களுக்கு உதவியாக உள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அவினாசிலிங்கம் பல்கலைக்கழக மகளிர் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் பாரதி ஹரிசங்கர் பேசியதாவது, “உங்கள் தொழில் என்பது நிதி அதிகாரம் மட்டுமல்ல, சமூகங்களை மாற்றுவதற்கான வழிமுறையாகவும் உள்ளது.எனவே நீங்கள் எதை அடைய விரும்புகிறீர்கள் என்பதில் உங்கள் இலக்கை நிர்ணயித்து அதை நோக்கி அர்ப்பணிப்புடனும் கவனத்துடனும் செயல்படுங்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...