மழை வெள்ளத்தால் செங்கத்துறை தடுப்பணை சேதம் - சீரமைக்கக்கோரி ஆட்சியர் அலுவலகத்தில் பாஜக மனு

கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் 2017 ஆம் ஆண்டு பெய்த கன மழையில் சேதமடைந்த செங்கத்துறை தடுப்பணையை சரி செய்து தர வலியுறுத்தி பாஜக சூலூர் கிழக்கு மண்டல தலைவர் ரவிக்குமார் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாஜகவினர் மனு அளித்தனர்.


கோவை: தாசில்தார், மாவட்ட ஆட்சியர், பொதுப்பணித்துறை, பேரூராட்சி அலுவலகம், முன்னாள் அமைச்சர் உட்பட பல்வேறு அரசு அலுவலர்களுக்கு நேரடியாக கோரிக்கை மனுக்களை அளித்தும் மழையால் சேதமடைந்த தடுப்பணையை இதுவரை சீரமைக்கவில்லை என பாஜகவினர் புகார் தெரிவித்துள்ளனர்.

கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் 2017 ஆம் ஆண்டு பெய்த கன மழையில் சேதமடைந்த செங்கத்துறை தடுப்பணையை சரி செய்து தர வலியுறுத்தி பாஜக சூலூர் கிழக்கு மண்டல தலைவர் ரவிக்குமார் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாஜகவினர் மனு அளித்தனர்.

இது குறித்து அவர்கள் அளித்துள்ள மனுவில், தடுப்பணை சேதம் அடைந்ததனால் அப்பகுதியை சுற்றிலும் உள்ள சுமார் 1800 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதியின்றி பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

இது சம்பந்தமாக தாசில்தார், மாவட்ட ஆட்சியர், பொதுப்பணித்துறை, பேரூராட்சி அலுவலகம், முன்னாள் அமைச்சர் உட்பட பல்வேறு அரசு அலுவலர்களுக்கு நேரடியாக கோரிக்கை மனுக்களை அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுத்து அந்த தடுப்பணையை சீரமைத்து தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

அப்பணிகள் எந்த துறையை சார்ந்தது என்பது தெரியாத பட்சத்தில் விவசாயிகளே அணையை சீரமைத்துக் கொள்ள அனுமதி அளிக்குமாறும் மனுவில் பாஜகவினர் குறிப்பிட்டுள்ளனர்.

Newsletter

கற்பகம் பொறியியல் கல்லூரியில் யுவா 2026 முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி

கோவை ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளின் மு...

கோவை மேற்கு மண்டலத்தில் காமராஜர் உணவு திட்ட சமையல் கூடத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மேற்கு மண்டலத்தில் பெருந்தலைவர் காமராஜர் உணவு திட்ட சமையலகம், வடவள்ளி பாதாள சாக்கட...

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...