லாரி மோதி காட்டு மாடு சம்பவ இடத்திலேயே பலியான பரிதாபம் - ஓட்டுநரை பிடித்து காவல்துறை விசாரணை

கோவை மாவட்டம் ஆனைகட்டி-கோவை சாலையில் சலீம் அலி பறவைகள் சரணாலயம் அருகே லாரி மோதியதில் காட்டு மாடு ஒன்று சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து லாரி பறிமுதல் செய்யப்பட்டு ஓட்டுநரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: லாரி மோதி உயிரிழந்த காட்டுமாடு பிரேத பரிசோனை செய்யப்பட்டது. இதில் இறந்தது பெண் காட்டு மாடு எனவும், வயது சுமார் 5-6 இருக்கலாம் எனவும், வாகனம் மோதிய தாக்கத்தால் மார்பெலும்பு உடைந்து மார்புகூட்டில் உதிரப்போக்கு ஏற்பட்டதனால் உண்டான இருதய அதிர்ச்சியால் காட்டு மாடு இறந்திருக்கலாம் எனவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.



கோவை மாவட்டம் ஆனைகட்டி-கோவை சாலையில் சலீம் அலி பறவைகள் சரணாலயம் அருகே லாரி மோதியதில் காட்டு மாடு ஒன்று சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



இதனையடுத்து லாரி பறிமுதல் செய்யப்பட்டு ஓட்டுநரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை ஆனைகட்டி மலைப் பகுதியில் காட்டு மாடுகள், மான்கள், யானைகள், சிறுத்தைகள் உள்ளிட்ட காட்டு விலங்குகள் உள்ளன. இவைகள் ஆனைகட்டி கோவை சாலையில் அவ்வப்பொது கடந்து செல்வது வழக்கம்.

இந்த நிலையில் நேற்று மாலை ஆனைகட்டி-கோவை சாலையில் சலீம் அலி பறவைகள் சரணாலயம் அருகே காட்டு மாடுகள் இரண்டு சாலையை கடந்துள்ளன. அப்போது அவ்வழியாக வந்த லாரி மோதியதில் காட்டு மாடு ஒன்று சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. மற்றொரு காட்டு மாடு காயமடைந்து வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது.

இதையடுத்து லாரி பறிமுதல் செய்யப்பட்டு லாரி ஓட்டுநரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.. இன்று காலை சுமார் கோவை வனக்கோட்டம் மாவட்ட வன அலுவலர் தலைமையில் கோட்ட உதவி வனப்பாதுகாவலர், கோவை வனச்சரக அலுவலர், தன்னார்வ தொண்டு நிறுவன உறுப்பினர்கள் ஆகியோர் முன்னிலையில் வனக்கால்நடை மருத்துவர் சுகுமார் பிரேத பரிசோதனை செய்தார்.

பிரேத பரிசோனையில் இறந்தது பெண் காட்டு மாடு எனவும், வயது சுமார் 5-6 இருக்கலாம் எனவும், வாகனம் மோதிய தாக்கத்தால் மார்பெலும்பு உடைந்து மார்புகூட்டில் உதிரப்போக்கு ஏற்பட்டதனால் உண்டான இருதய அதிர்ச்சியால் காட்டு மாடு இறந்திருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து லாரி ஓட்டுநரிடம் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...