மேல்முடி ரங்கநாதர் கோவிலுக்கு சென்ற இளைஞர் உயிரிழப்பு - சிறுத்தை தாக்கியிருக்கலாம் என தகவல்!

கோவை தடாகம் அருகேயுள்ள மேல்முடி ரங்கநாதர் கோவிலுக்கு சென்ற செட்டிபாளையம் பகுதியை சேர்ந்த சுகசூரியா என்ற இளைஞர் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், அவரது கைகள் மற்றும் கழுத்து பகுதியில் சிறுத்தை தாக்கிய தடம் இருப்பதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: தடாகம் அருகே மேல்முடி ரங்கநாதர் கோவிலுக்கு சென்ற இளைஞர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை தடாகம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மேல்முடி ரங்கநாதர் கோவில் உள்ளது. இது ஒரு மலைக்கோவில் ஆகும். இங்கு சாலை வசதியோ படிக்கட்டுகளோ இல்லாததால், மலைப்பாதை வழியாக மட்டுமே ஏறி செல்ல முடியும்.

வழக்கமாக விசேஷ நாட்களில் அதிகமான பக்தர்கள் செல்வது வழக்கம். மற்றபடி இக்கோவிலுக்கு ஒரு சிலர் மட்டுமே சென்று வருவர்.

இந்நிலையில் நேற்று மாலை மேல்முடி தண்ணீர் பாறை பகுதியில் வன களப்பணியாளர்கள் ரோந்து பணி மேற்கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத இளைஞரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும் சடலத்தின் கை மற்றும் கழுத்துப் பகுதிகளில் சிறுத்தை தாக்கியது போல் காயங்கள் இருந்துள்ளது.

இதனை அடுத்து தடாகம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அங்கு சென்ற காவல்துறையினர் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.



விசாரணையில் உயிரிழந்த நபர் கோவை பேரூர் செட்டிபாளையம் பகுதியை சேர்ந்த சுகசூர்யா (24) என்ற இளைஞர் என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு பெற்றோரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

இதில் சுகசூரியா அடிக்கடி சிவன் கோவிலுக்கும் மலை கோவில்களுக்கும் தனியாகச் சென்று வருவார் என்றும் அவ்வாறு கோவில்களுக்குச் சென்றால் இரண்டு மூன்று நாட்கள் கழித்து தான் வருவார் என்றும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த 15ம் தேதி கோவிலுக்கு சென்று விட்டு வருகிறேன் என்று கிளம்பிய சுகசூரியா வீடு திரும்பாத நிலையில் தற்போது சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இதே பகுதியில் காட்டு மாடு ஒன்றை சிறுத்தை தாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...