சார்ஜாவிலிருந்து கோவைக்கு தங்க பிஸ்கெட்டுகள் கடத்தி வந்தவர் கைது


சார்ஜாவில் இருந்து கோவை வரும்  ஏர் அரேபியா விமானம் மூலம் தங்க பிஸ்கெட்டுகள் கடத்தப்படுவதாக கோவை விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் இன்று காலை  கோவை வந்தடைந்த ஏர் அரேபியா விமானத்தில் வந்த பயணிகளிடம் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது ஒலிப்பெருக்கி ஒன்றின் அடிப்பக்கத்தில் வைத்து 1 கிலோ 406  கிராம் எடையுள்ள தங்க பிஸ்கெட்டுகள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. 

தொடர்ந்து, தங்க பிஸ்கெட்டுகளை கடத்தி வந்த கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்த திவாகரன் (51) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கடத்தி வரப்பட்ட தங்க பிஸ்கெட்டுகளின் மதிப்பு சுமார் ரூ.41 லட்சம் என்று கூறப்படுகிறது.

இதேபோல், கடந்த 11ம் தேதி சார்ஜாவில் இருந்து கோவை வந்த விமானத்தில் 1கிலோ 166 கிராம் தங்க பிஸ்கெட்டுகள் கடத்தி வந்தவரை விமான நிலைய அதிகாரிகள் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...