சென்னை கோர்ட்டு தீர்ப்புக்கு வரவேற்பு - தாராபுரத்தில் அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக்கூட்டம் செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை வரவேற்று தாராபுரத்தில் அதிமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர்.


திருப்பூர்: தாராபுரம் அண்ணா சிலை முன்பு நகர செயலாளர் சி.ராஜேந்திரன் தலைமையில் நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்று அ.தி.மு.க.வினர் நேற்று மாலையில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.



அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா மறைவுக்கு பின்பு அ.தி.மு.க.வில் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், துணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமியும் இருந்து வந்தனர். கட்சியில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அ.தி.மு.க. இரண்டு அணியாக பிரிந்து செயல்பட்டு வந்தது.

எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டப்பட்டு அதில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஓ.பி.எஸ். உள்ளிட்ட 4 பேரை கட்சியிலிருந்து நீக்கம் செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் சென்னை உயர் நீதிமன்றத்தில்மனுதாக்கல் செய்தனர்.

அதில் நேற்று சென்னை உயர் நீதிமன்றம் எடப்பாடி பழனிச்சாமி கூட்டிய பொதுக்குழு கூட்டம் செல்லும். 4 பேரை நீக்கியது செல்லும் என தீர்ப்பளித்தது.



இதையொட்டி தாராபுரம் அண்ணா சிலை முன்பு நகர செயலாளர் சி.ராஜேந்திரன் தலைமையில் அ.தி.மு.க.வினர் நேற்று மாலையில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர்.

அப்போது மாவட்ட மகளிர் அணி துணை செயலாளர் கவுரி சித்ரா முருகேசன், மாவட்ட கவுன்சிலர் பானுமதி கருணாகரன், நகர பொருளாளர் சாமுவேல், அம்மா பேரவை செயலாளர் கே.என். ராமசாமி, மாவட்ட பிரதிநிதி கோல்டன் ராஜ், முன்னாள் நகர மன்ற உறுப்பினர் அரசு குமாரன், மலை மாரிமுத்து, தினேஷ் குமார், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் கே.ஆர்.சதீஷ், மின்சார பிரிவு அண்ணா தொழிற்சங்க தலைவர் பரணிகுமார், ஸ்டுடியோ கார்த்திக், லிட்டில் ராஜேந்திரன், வார்டு செயலாளர்கள் கணேசன், ராஜேஸ்வரி, செல்வி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...