சென்னை கோர்ட்டு தீர்ப்புக்கு வரவேற்பு - தாராபுரத்தில் அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக்கூட்டம் செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை வரவேற்று தாராபுரத்தில் அதிமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர்.


திருப்பூர்: தாராபுரம் அண்ணா சிலை முன்பு நகர செயலாளர் சி.ராஜேந்திரன் தலைமையில் நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்று அ.தி.மு.க.வினர் நேற்று மாலையில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.



அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா மறைவுக்கு பின்பு அ.தி.மு.க.வில் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், துணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமியும் இருந்து வந்தனர். கட்சியில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அ.தி.மு.க. இரண்டு அணியாக பிரிந்து செயல்பட்டு வந்தது.

எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டப்பட்டு அதில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஓ.பி.எஸ். உள்ளிட்ட 4 பேரை கட்சியிலிருந்து நீக்கம் செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் சென்னை உயர் நீதிமன்றத்தில்மனுதாக்கல் செய்தனர்.

அதில் நேற்று சென்னை உயர் நீதிமன்றம் எடப்பாடி பழனிச்சாமி கூட்டிய பொதுக்குழு கூட்டம் செல்லும். 4 பேரை நீக்கியது செல்லும் என தீர்ப்பளித்தது.



இதையொட்டி தாராபுரம் அண்ணா சிலை முன்பு நகர செயலாளர் சி.ராஜேந்திரன் தலைமையில் அ.தி.மு.க.வினர் நேற்று மாலையில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர்.

அப்போது மாவட்ட மகளிர் அணி துணை செயலாளர் கவுரி சித்ரா முருகேசன், மாவட்ட கவுன்சிலர் பானுமதி கருணாகரன், நகர பொருளாளர் சாமுவேல், அம்மா பேரவை செயலாளர் கே.என். ராமசாமி, மாவட்ட பிரதிநிதி கோல்டன் ராஜ், முன்னாள் நகர மன்ற உறுப்பினர் அரசு குமாரன், மலை மாரிமுத்து, தினேஷ் குமார், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் கே.ஆர்.சதீஷ், மின்சார பிரிவு அண்ணா தொழிற்சங்க தலைவர் பரணிகுமார், ஸ்டுடியோ கார்த்திக், லிட்டில் ராஜேந்திரன், வார்டு செயலாளர்கள் கணேசன், ராஜேஸ்வரி, செல்வி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Newsletter

கற்பகம் பொறியியல் கல்லூரியில் யுவா 2026 முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி

கோவை ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளின் மு...

கோவை மேற்கு மண்டலத்தில் காமராஜர் உணவு திட்ட சமையல் கூடத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மேற்கு மண்டலத்தில் பெருந்தலைவர் காமராஜர் உணவு திட்ட சமையலகம், வடவள்ளி பாதாள சாக்கட...

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...