தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாள் விழா - உடுமலையில் தேமுதிகவினர் உற்சாக கொண்டாட்டம்!

தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனர் கேப்டன் விஜயகாந்தின் 71வது பிறந்த நாளை முன்னிட்டு உடுமலைப்பேட்டையில் தேமுதிகவினர் 10 கிலோ கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடினர். மேலும், ராஜகாளியம்மன் கோவிலில் கேப்டன் விஜயகாந்த் உடல் நலம் பெற வேண்டி சிறப்பு பூஜை மேற்கொள்ளப்பட்டது.


திருப்பூர்: தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி, உடுமலைபேட்டையில், தேமுதிகவினர் அவர் உடல் நலம்பெற வேண்டி சிறப்பு பூஜை மேற்கொள்ளப்பட்டது.



தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனர் கேப்டன் விஜயகாந்தின் 71வது பிறந்த நாளை முன்னிட்டு உடுமலைப்பேட்டையில் மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட கழக செயலாளர் 10 கிலோ கேக் வெட்டி விழாவை துவக்கி வைத்தார்.



பின்னர் பெரிய கோட்டை ஊராட்சியில் உள்ள ராஜகாளியம்மன் கோவிலில் கேப்டன் விஜயகாந்த் உடல் நலம் பெற வேண்டி சிறப்பு பூஜை மேற்கொள்ளப்பட்டது.



உடுமலைப்பேட்டை பேருந்து நிலையம் பழனி ஆண்டவர் நகர் கோமதி நகர் கொல்லம் பட்டறை உட்பட 7க்கு மேற்பட்ட இடங்களிலும் உடுமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட சிவசக்தி காலனி சங்கர் நகர் செல்லப்பம்பாளையம் மானுப்பட்டி உரல் பட்டி ஊராட்சிகளில் தேமுதிக கொடியேற்றி இனிப்புகள் மற்றும் அன்னதானம் அனைத்து இடங்களிலும் வழங்கப்பட்டது.

மேலும் எரிசனம்பட்டியில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளியில் பள்ளி மாணவர்கள் மாணவிகளுக்காக இரண்டு எடை இயந்திரங்கள் வழங்கப்பட்டன.



சிவசக்தி காலணியில் பெண்களுக்கு சேலை வழங்கப்பட்டது.

மாவட்ட கழக செயலாளர் ஆறுசாமி தலைமை தாங்கினார், மாவட்ட கழக தலைவர் வழக்கறிஞர் பன்னீர்செல்வம், பொருளாளர் அண்ணாதுரை , துணைச் செயலாளர்கள் ரமேஷ் பாபு, ஆலாம் பாளையம் கந்தசாமி, செயற்குழு உறுப்பினர் ஜி.கே என்கிற கணேஷ்குமார் பொதுக்குழு உறுப்பினர்கள் கிரி, பெரியசாமி, குணசேகரன் உடுமலை நகர செயலாளர் ராமச்சந்திரன், ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் துரை கண்ணன் மற்றும் தாராபுரம் பகுதியைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...