மரப்பட்டா வழங்க வேண்டும் - விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பாக கோவை பேரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்க கோவை மாவட்ட குழு தலைவர் சு. பழனிச்சாமி தலைமையில் நூற்றுக்கு மேற்பட்ட விவசாயிகள் ஒன்று திரண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை: நீர்நிலைகளின், தனியார் ஆக்கிரமிப்புகளை அளவிடு செய்ய வேண்டும், நீர் மேலாண்மை வாங்கும் விதமாக நீர் நிலைகளை மேம்படுத்த வேண்டும், விவசாயிகளின் விளை நிலங்களுக்கு அருகாமையில் உள்ள அரசு நிலங்களுக்கு மரப்பட்டா வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.



தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பாக கோவை பேரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்க கோவை மாவட்ட குழு தலைவர் சு. பழனிச்சாமி தலைமையில் நூற்றுக்கு மேற்பட்ட விவசாயிகள் ஒன்று திரண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு அடிப்படையாக இருக்கும் நீர்நிலைகளின், தனியார் ஆக்கிரமிப்புகளை அளவிடு செய்ய வேண்டும், நீர் மேலாண்மை வழங்கும் விதமாக நீர் நிலைகளை மேம்படுத்த வேண்டும், விவசாயிகளின் விளை நிலங்களுக்கு அருகாமையில் உள்ள அரசு நிலங்களுக்கு மரப்பட்டா வேண்டும், நீண்ட காலமாக பயிர் செய்து வரும் விவசாயிகள், தங்களின் சொந்த விளைநிலங்களுக்கு அருகாமையில் உள்ள அரசு விலை நிலங்களிலும் பயிரிடப்பட்டு இருப்பதனால், அவர்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை விவசாயிகள் வலியுறுத்தினர்.

இந்த நிலையில் பேரூர் பட்டீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் விவசாயிகள் குத்தகை எடுத்து விவசாயம் செய்து வரும் நிலையில், அவர்கள் ஆக்கிரமிப்பாளர்கள் அல்ல என விவசாயிகள் தெரிவித்தனர்.



அதேபோன்று விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளையும் திரும்ப பெற வலியுறுத்தினர். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் செய்து வரும் நிலையில், கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் பேரூர் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...