நியாய விலைக்கடையை முற்றுகையிட்ட தி.மு.க எம்.எல்.ஏ. கைது


நியாய விலைக்கடைகளில் மலிவு விலைப்பொருட்கள் முறையாக வழங்க கோரி தி.மு.க  சிங்காநல்லூர் சட்டம்ன்ற தொகுதி எம்.எல்.ஏ. நா.கார்த்திக் இன்று கோவை மசக்காளி பாளையம் பகுதியில் உள்ள நியாய விலைக்கடையை முற்றுகையிட்டார். அவருடன் 50க்கும் மேற்பட்ட தி.மு.க  உறுப்பினர்கள் கலந்து கொண்டு, நியாய விலைக்கடைகளில் முறையாக பொருட்களை வழங்க  கோரி கோஷமிட்டனர்.

 

தொடர்ந்து, எம்.எல்.ஏ. நா.கார்த்திக்  செய்தியாளர்களிடம் பேசியதாவது :- 

எங்கள் கட்சியின் செயற்தலைவர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் அனைத்து தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களும் அவர்கள் தொகுதிக்குட்பட்ட நியாய விலைக்கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். அதன்படி மக்களுக்கு முறையாக பொருட்களை வழங்காத நியாய விலைக்கடைகளை முற்றுகையிடும் போராட்ட்ம் இன்று தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. ஆளுங்கட்சி மக்கள் விரோத போக்கை கடைபிடித்து வருகிறது. அத்தியாவசிய பொருட்கள் மக்களை சென்றடைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக இந்த பிரச்சனைகள் சரி செய்யப்பட வேண்டும். 

இவ்வாறு அவர் கூறினார். 



தொடர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க வினர் மற்றும் எம்.எல்.ஏ.வை போலீசார் கைது செய்தனர்.

Newsletter

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...