ஒரே நாளில் அதிகப்படியான அபராதம் வசூலித்து சேலம் தெற்கு ரயில்வேத் துறை அதிகாரிகள் சாதனை

சமீபகாலமாக ரயில் பயணத்தின் போது பெரும்பாலான பயணிகள் பயணச்சீட்டு பெறாமலும், முறையற்ற பயணத்தில் ஈடுபட்டு வருவாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துவருகின்றன. அதனை தடுக்கும் வகையில் சேலம் தெற்கு ரயில்வேத் துறையின் சார்பில் ரயில் பயணிகளிடைய தொடர் சோதனைகளும், ரகசிய சோதனைகளும் நடைபெற்று வருகிறது.

அதன்படி சேலம் டிஆர்எம் ஸ்ரீ ஹரிசங்கர் வர்மா தலைமையில் கடந்த வாரம் ஞாயிறன்று பயணிகளிடையே சோதனை நடைபெற்றது. அதில், முறையாக பயணச்சீட்டு இல்லாமை, பார்சல் பொருட்களுக்கான டிக்கெட் இல்லாமை உள்ளிட்டு 2,47,025 ரூபாயும், 546 நபர்கள் பயணச்சீட்டு முன்பதிவு பெறாமை என 2,43,325 ரூபாயும் அபராதமாக வசூலிக்கப்பட்டது.

மேலும், இச்சோதனையில் அதிகப்படியான பொருட்களுக்கான அனுமதி சீட்டு பெறாததால் 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 4700 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டது. இந்த ஒரு நாள் சோதனையில் அபராதமாக பெறப்பட்ட தொகையே சேலம் ரயில்வே கோட்டத்தினால் வசூலிக்கப்பட்ட அதிகப்படியான தொகை ஆகும். முன்னதாக 2016-யில் இதேப்போன்ற சோதனையில் சேலம் ரயில்வே கோட்டத்துறையால் 2,10,400 ரூபாய் வசூல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சேலம், ஈரோடு, திருப்பூர் மற்றும் கோவை ஆகிய பகுதிகளில் நடைபெற்ற இந்த சோதனையில் சிறப்புப் படை வீரர்கள் 18 பேர் உட்பட 216 அதிகாரிகள் ஈடுபட்டனர்.

மேலும், ரயில் பயணத்தின் போது முறையாக பயணச்சீட்டு பெறாமை, அதிகப்படியான பொருட்களை எடுத்துச் செல்லும் போது அதற்கான தொகை செலுத்தாமை உள்ளிட்ட குற்றச்செயல்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என சேலம் கோட்ட தெற்கு ரயில்வே டிஆர்எம் ஸ்ரீ ஹரிசங்கர் வர்மா தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...