நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 78வது நினைவு நாள் - இரத்ததான கழகம் சார்பில் உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை!

கோவை பெரியநாயக்கன்பாளையம் அடுத்த கூடலூர் கவுண்டம்பாளையம் பகுதியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்-ன் 78 வது நினைவு நாளையொட்டி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ரத்ததான கழகம் சார்பில் அவரது திருவுருவ சிலைக்கு கூடலூர் நகராட்சி தலைவர் அறிவரசு தலைமையில் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.



கோவை: நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் நினைவு நாளை ஒட்டி கோவையில் ரத்ததான கழகம் சார்பில் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்-சின் 78 வது நினைவு நாளையொட்டி நாடு முழுவதும் அவரது திரூஉருவச் சிலைகளுக்கு பலர் மரியாதை செலுத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை பெரியநாயக்கன்பாளையம் அடுத்துள்ள கூடலூர் கவுண்டம்பாளையத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்-சின் 78 வது நினைவு நாளை ஒட்டி நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ரத்ததான கழகம் சார்பில் நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.



இந்த நிகழ்ச்சியில் கூடலூர் நகராட்சி தலைவர் அறிவரசு தலைமை தாங்கி சுபாஸ் சந்திரபோஸ் வீரவரலாறு குறித்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு எடுத்துரைத்து நேதாஜியின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.



தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவியர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.



மேலும் அருகில் இருந்த மகாத்மா காந்தி மற்றும் காமராஜர் திருவுருவ சிலைகளுக்கும் மாலைகள் சூடி மரியாதை செய்தனர்.



இந்நிகழ்ச்சியில் நகராட்சி துணைத் தலைவர் ரதி ராஜேந்திரன், கவுன்சிலர்கள் அகில் சந்திரசேகர், பேங்க் முருகேசன், துரை செந்தில்குமார், பாலசுப்பிரமணியம், ஜெனார்த்தனன், ரேகா, கூடலூர் நகராட்சி அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் உமா, பள்ளி கல்விக்குழுவை சேர்ந்த பொன் மாடசாமி, ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

மேலும், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ரத்ததான கழகத்தை சேர்ந்த கே.ஆர்.செல்வம், கே.ராஜகோபால், பி.முத்துராஜா, நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் நண்பர்கள் நற்பணி மன்ற செயலாளர் ஆனந்தபாபு, படையப்பா மற்றும் ஊர் பெரியவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் திரளாக கலந்துக்கொண்டு மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...