வால்பாறை அரசு மருத்துவமனை அருகே சிறுத்தை நடமாட்டம் - மக்கள் அச்சம்!

வால்பாறை அரசு மருத்துவமனை வளாகத்தில் நேற்றிரவு 9 மணியளவில் உலா வந்த சிறுத்தையால், பொதுமக்கள், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அச்சமடைந்து உள்ளனர். இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில், சிறுத்தையை உடனடியாக பிடிக்க வேண்டும் என வனத்துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



கோவை: வால்பாறை அரசு மருத்துவமனை வளாகத்தில் உலா வந்த சிறுத்தையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் வனவிலங்கு நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இதில் சிறுத்தை, காட்டு யானை, கரடி, காட்டுப்பன்றி, போன்றவை குடியிருப்பு பகுதியில் சுற்றி வருவதால் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

இந்நிலையில் வால்பாறை அரசு மருத்துவமனை அருகே இரவு 9 மணி அளவில் மருத்துவமனை வளாக பகுதியில் சிறுத்தை ஒன்று சென்றுள்ளது. இது, அருகில் இருந்த கட்டிடத்தில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது,

சுமார் ஒன்பது மணி அளவில் மருத்துவமனையில் இருந்து செவிலியர், மருத்துவர் வரும் பொழுதும், இரண்டு சக்கர வாகனம் வரும் பொழுதும் சிறுத்தை நடமாடியது மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

குடியிருப்பு பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். குடியிருப்பு பகுதிக்குள் உலா வரும் சிறுத்தையை உடனடியாக வனத்துறையினர் பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை கொடுத்துள்ளனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...