மாவீரன் ஒண்டிவீரன் நினைவு நாள் - உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை

கோவை துடியலூர் பேருந்து நிறுத்தம் அருகே தேசிய தாழ்த்தப்பட்டோர் மக்கள் நல உரிமை இயக்கத்தின் சார்பாக மாவீரன் ஒண்டிவீரன் 252 வது நினைவு நாளை முன்னிட்டு மாவீரர் ஒன்டிவீரனின் திருவுருவ படத்திற்கு கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.



கோவை: மாவீரன் ஒண்டிவீரனின் நினைவு நாள் கடைபிடிக்கப்பட்டது. அப்போது, அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர், மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

கோவை துடியலூர் பேருந்து நிறுத்தம் அருகே தேசிய தாழ்த்தப்பட்டோர் மக்கள் நல உரிமை இயக்கத்தின் சார்பாக மாவீரன் ஒண்டிவீரன் 252 வது நினைவு நாளை முன்னிட்டு மாவீரர் ஒன்டிவீரனின் திருவுருவ படத்திற்கு கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். தொடர்ந்து மாற்று திறனாளிகளுக்கு அரிசி, சேலை மற்றும் சார்ட்டுகள் உள்ளிட்ட நலத்திட்டங்களை வழங்கினர்.



தேசிய தாழ்த்தப்பட்டோர் மக்கள் நல உரிமை இயக்கத்தின் சார்பாக மாவீரன் ஒண்டிவீரன் 252 வது நினைவு நாள் மற்றும் நலத்திட்டங்கள் வழங்கும் விழா கோவை துடியலூர் பேருந்து நிலையம் அருகில் தேசிய தாழ்த்தப்பட்டோர் மக்கள் நல உரிமை இயக்கத்தின் நிறுவன தலைவர் ஆ.மருதாசலம் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மாவீரர் ஒன்டிவீரனின் திருவுருவ படத்திற்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினரும் வடக்கு மாவட்ட செயலாளருமான பி.ஆர்.ஜி.அருண்குமார் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செய்தார். இந்நிகழ்ச்சியில் திராவிட சிறுத்தைகள் கட்சி தலைவர் பருவாய் சாமிநாதன் கலந்து கொண்டு ஒண்டிவீரன் வரலாற்றை மக்களுக்கு எடுத்துரைத்தார்.

அதை தொடர்ந்து மாற்று திறனாளிகளுக்கு அரிசி, சேலை மற்றும் சார்ட்டுகள் உள்ளிட்ட நலத்திட்டங்களை சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு தாழ்த்தப்பட்டோர் நல உரிமை இயக்கம் பொதுச்செயலாளர் VPM பன்னீர் மற்றும் தேசிய தாழ்த்தப்பட்டோர் மக்கள் நல உரிமை இயக்கத்தின் பொதுச்செயலாளர் சந்திரன் மற்றும் 100 க்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...