கோவை ஜிடி அருங்காட்சியகத்தில் இந்திய கார் வகை பிரிவு நாளை திறப்பு!

கோவை ஜிடி அருங்காட்சியகத்தில் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய கார்களுக்காக சிறப்பு பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பிரிவில் ஒவ்வொரு கால கட்டத்திலும் பிரபலமடைந்த கார்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளன. இது பொதுமக்கள் பார்வைக்காக நாளை (ஆக.18) திறக்கப்பட உள்ளதாக அறிவிப்பு.



கோவை: கோவையில் உள்ள ஜிடி அருங்காட்சியகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட இந்திய கார்கள் பிரிவு நாளை பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்பட உள்ளது.

கோவையில் ஜிடி கார் மியூசியம் 2015 ஏப்ரல் மாதம் திறக்கப்பட்டது. இதற்கு இளைஞர்கள் முதல் முதியோர் வரை அனைத்து பொதுமக்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பொதுமக்களின் நல்லாதரவையடுத்து, இந்த அருங்காட்சியகம் தொடர்ந்து வாகனங்களின் சேகரிப்பை சேர்த்து வருகிறது.

பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட பின்னுாட்ட கருத்துக்களின் அடிப்படையிலும், தற்போது நாடு சுதந்திரமடைந்த 1947ம் ஆண்டு முதல் இந்திய வாகனத்துறையின் சாதனைகளை விளக்கும் வகையில் தனி பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.



இந்திய கார் பிரிவு, 10,500 சதுர அடி பரப்பளவில் 40 கார்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.



இவை, ஒவ்வொரு கால கட்டத்திலும் பிரபலம் அடைந்தவை.



இவை, ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ், பிரீமியர் ஆட்டோமொபைல்ஸ், ஸ்டேன்டேர்டு மோட்டார்ஸ், பஜாஜ் ஆட்டோ, பஜாஜ் டெம்போ, சிபானி ஆட்டோமொபைல்ஸ், மாருதி உத்யோக், டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் தயாரிப்பாகும். இவற்றின் தயாரிப்பின் அடையாளங்களாக இவை திகழ்கின்றன.



இங்கு வைக்கப்பட்டுள்ள பல கார்கள், மிகவும் கவனத்துடன் தேர்வு செய்யப்பட்டு புதுப்பிக்கப்பட்டவை, இன்னும் பல கார்கள் அன்பளிப்பாக கிடைத்தவை. இந்தியாவின் ஆட்டோமொபைல் தொழிலின் வளர்ச்சி மற்றும் இந்தியாவில் மக்களுக்காக கார்களை தயாரிக்க மேற்கெள்ளப்பட்ட முயற்சிகளை விளக்குவதாக இந்த அருங்காட்சியகம் அமைந்துள்ளது.



அருங்காட்சியகத்தின் இந்த சிறப்பு பிரிவு, 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வரும் 2023 ஆகஸ்ட் 18ம் தேதி காலை 9.00 மணி அளவில் பொதுமக்களுக்காக திறக்கப்படும்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...