தாராபுரம் அரசு மருத்துவமனையில் அமைச்சர் கயல்விழி நேரில் ஆய்வு - சிகிச்சை குறித்து நோயாளிகளிடம் விசாரிப்பு

ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி தாராபுரம் அரசு மருத்துவமனையில் நேரில் சென்று ஆய்வு செய்தார். அவசர சிகிச்சை பரிவு, உள்நோயாளிகள் பிரிவு, கர்ப்பிணி பெண்கள் பிரிவு, இரத்த வங்கி பிரிவு உள்ளிட்ட பகுதிகளை அவர் பார்வையிட்டார்.



திருப்பூர்: தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கூடுதலாக அதிநவீன வசதிகளுடன் கூடிய மருத்துவமனை விரிவாக்க மையம் கட்டிட பணிகளை நேரில் ஆய்வு செய்த அமைச்சர் கயல்விழி, கட்டிட வேலைகள் விரைவாக முடித்து தருமாறு பொறியாளரிடம் கேட்டுகொண்டார்.



திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு சரியான முறையில் சிகிச்சை அளிக்க படுகின்றதா? என ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் நேரில் சென்று ஆய்வு செய்தார்.



அரசு மருத்துவ மனையில் உள்ள அவசர சிகிச்சை பரிவு, உள்நோயாளிகள் பிரிவு, கர்ப்பிணி பெண்கள் பிரிவு, இரத்த வங்கி பிரிவு உள்ளிட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று அங்கு உள்ள நோயாளிகளிடம் உடல் நலம் குறித்து விசாரித்தார்.



மேலும் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கூடுதலாக அதிநவீன வசதிகளுடன் கூடிய மருத்துவமனை விரிவாக்க மையம் கட்டிட பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார்.



கட்டிட பணியில் உள்ள பொறியாளரிடம் கட்டிட வேலைகள் குறித்து விசாரித்து தெரிந்து கொண்டார். கட்டிடம் விரைவாகவும் உறுதியாகவும் கட்டி முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைக்க வேண்டும் என தெரிவித்தார்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...