பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகளை அடக்க வேண்டும் - தென்னிந்திய திருச்சபைகளின் வாலிபர் அமைப்பினர் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்

பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகளை கண்டித்து கோவை திருமண்டல தென்னிந்திய திருச்சபைகளின் வாலிபர் அமைப்பினர் சார்பாக கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள தென்னிந்திய திருச்சபைகள் மண்டல அலுவலகம் முன்பாக கருப்பு சட்டை அணிந்தபடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


கோவை: தென்னிந்திய திருச்சபைகள் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பெண்ணுரிமை காப்போம், பெண்களுக்கு எதிரான அத்துமீறல்களை கண்டிப்போம் என்று ஏராளமானோர் கலந்துகொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு வன்முறைகளுக்கு எதிராக தென்னிந்திய திருச்சபைகள் சார்பாக ஒவ்வொரு வியாழக்கிழமையும் கருப்பு சட்டை அணிந்து திருச்சபையினர் தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.



இதன் தொடர்ச்சியாக கோவை திருமண்டல தென்னிந்திய திருச்சபைகளின் வாலிபர் அமைப்பினர் சார்பாக கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள தென்னிந்திய திருச்சபைகள் மண்டல அலுவலகம் முன்பாக கருப்பு சட்டை அணிந்தபடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் நாடு முழுவதும் நடைபெறும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை கண்டித்து கருப்பு சட்டை அணிந்த இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் கலந்து கொண்டனர்.

இதில் பெண்ணுரிமை காப்போம்,பெண்களுக்கு எதிரான அத்துமீறல்களை கண்டித்தும் கண்டன கோசங்கள் எழுப்பினர். தென்னிந்திய திருச்சபைகளின் கோவை மண்டல பிஷப் திமோத்தி ரவீந்தர் அறிவுறுத்தலின் பேரில் நடைபெற்ற இதில், பொருளாளர் டி.எஸ்.அமிர்தம், செயலாளர் பிரின்ஸ் கால்வின், துணை தலைவர் டேவிட் பர்ணபாஸ், வாலிபர் அமைப்பு நிர்வாகிகள் டாக்டர் ப்ரீத்தி கரோலின், ஜேகோ சாமுவேல், உட்பட தென்னிந்திய திருச்சபைகள் கோவை மண்டல நிர்வாகிகள்,உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...