துடியலூர் அருகே வடிகால் கட்டும் பணியை தொடங்கி வைத்த கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ!

துடியலூர் அடுத்த அசோகபுரம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய நிதியில் ரூ.9.70 லட்சம் மதிப்பில், வடிகால் கட்டுமான பணிக்கான பூமி பூஜையை கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ பி.ஆர்.ஜி அருண்குமார் தொடங்கி வைத்தார்.



கோவை: துடியலூர் அடுத்த அசோகபுரம் பகுதியில் வடிகால் அமைக்கும் பணியை கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ பி.ஆர்.ஜி அருண்குமார் தொடங்கி வைத்தார்.



கோவை துடியலூரை அடுத்து உள்ள அசோகபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட, 11 வது வார்டு ரங்கம்மாள் காலனி, டேங்க் வீதி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை அடுத்து ஊராட்சி ஒன்றிய நிதியில் ரூபாய் 9.70 லட்சம் மதிப்பில் வடிகால் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.

இப்பணிகளுக்கான பூமி பூஜை நிகழ்ச்சி ஒன்றிய கவுன்சிலர் மாணிக்கம் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஊராட்சித் தலைவர் ரமேஷ் முன்னிலை வகித்தார்.



இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் PRG அருண்குமார் வழிகால் அமைக்கும் பணியினை பூமி பூஜையுடன் தொடங்கி வைத்தார்.



இந்நிகழ்ச்சியில் ஒன்றியத் தலைவர் நர்மதா துரைசாமி, துணைத்தலைவர் பூக்கடை ரவிச்சந்திரன், குருடம்பாளையம் ஊராட்சி தலைவர் ரவி, அசோகபுரம் ஊராட்சி துணைதலைவர் சண்முக சுந்தரம், வார்டு உறுப்பினர் ஜெயப்பிரியா சக்கையன், மற்றும் பகுதி மக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...