சுதந்திர தினத்தை முன்னிட்டு சூலூர் அருகே நடைபெற்ற கிராமசபை கூட்டம் - மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு!

சுதந்திர தினத்தினை முன்னிட்டு கோவை சூலூர் அடுத்த பட்டணம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார்.


கோவை: சுதந்திர தினத்தினை முன்னிட்டு சூலூர் அருகே நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் கலந்து கொண்டார்.

சுதந்திர தினத்தினை முன்னிட்டு கோவை சூலூர் அடுத்த பட்டணம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார்.



மேலும் இக்கூட்டத்தில் உதவி ஆட்சியர்(பயிற்சி) ஆசிக் அலி, ஊராட்சி மன்ற தலைவர் கோமதி செல்வகுமார், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மோகன்ராஜ், ஒன்றிய குழு உறுப்பினர் ரகு(எ) துரைராஜ், திட்ட இயக்குநர்(மகளிர் திட்டம்) காசிநாதன்,

மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் பெருமாள்சாமி, ஊராட்சி செயலர் சரவணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவகாமி சதீஸ்குமார், சூலூர் வட்டாட்சியர் நித்திலவேணி மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பேசியதாவது, தமிழ்நாடு அரசால் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் வருகின்ற செப்டம்பர் மாதம் செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தின் கீழ் கோயம்புத்தூர் மாவட்டத்தில் இரண்டு கட்டமாக முகாம்கள் நடத்தப்பட்டு, விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

மேலும், இந்த முகாம்களில் கலந்துகொள்ள முடியாதவர்கள், விண்ணப்பங்கள் வழங்காமல் விடுபட்டவர்கள் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்குவிதமாக இந்த மாதம் 18, 19, 20 ஆகிய நாட்களில் முகாம்கள் நடைபெறவுள்ளது.

முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெறுகின்றவர்களும் இத்திட்டத்தில் பயன்பெறலாம் என அரசு அறிவித்துள்ளது. எனவே, அவர்களும் இம்முகாம்களில் கலந்துகொண்டு, கலைஞர் மகளிர் உரிமை தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

இக்கிராம சபைக் கூட்டத்தில் தூய்மையான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்தல், இணையவழி மனைப்பிரிவு மற்றும் கட்டிட அனுமதி வழங்குதல், அயோடின் கலந்த உப்பை பயன்படுத்துதல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், ஜல்ஜீவன் மிஷன், பிரதம மந்திரி ஊரகக் குடியிருப்புத் திட்டம், தூய்மை பாரத இயக்கம்(கிராமம்),

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிதிட்டம், மாற்றுத்திறனாளிகளுக்கான கணக்கெடுப்பு உரிமைகள் திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வதார இயக்கம், குழந்தை தொழிலாளர் முறை அகற்றுதல் குறித்த விழிப்புணர்வு, போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உள்ளிட்ட 14 கூட்ட பொருட்கள் நிறைவேற்றப்பட்டது.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுதல் உறுதி மொழியை மாவட்ட ஆட்சித்தலைவர் வாசிக்க பொதுமக்கள் அனைவரும் எடுத்து கொண்டனர். பல்வேறு துறை அலுவலர்கள் தங்கள் துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து பொது மக்களுக்கு விளக்கப்பட்டது.

மேலும் ஊராட்சி செயலர் கிராம சபை கூட்டம் பொருள்கள் குறித்து விளக்கினார். தொடர்ந்து பொதுமக்களிடம் மாவட்ட ஆட்சித் தலைவர் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்து சம்பந்தப்பட்ட துறை அலுவலருக்கு நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...